tamilnadu

வேலை நிறுத்தப் போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பங்கேற்பு

சென்னை, ஜன. 13- ஜாக்டோ - ஜியோ வேலை நிறுத்தப்  போராட்டத்தில் சத்துணவு ஊழி யர்கள் பங்கேற்கிறார்கள். இது குறித்து மாநிலத் தலைவர் ஆர்.கலா, பொதுச் செயலாளர் மலர்விழி  ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு முதலமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதியான சத்துணவு ஊழி யர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதி யத்தை மாற்றி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சத்து ணவு திட்டத்தில் உள்ள சுமார் 59 ஆயிரம்  காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

முதல்வரை சந்திப்போம்

சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9,000 வழங்க வேண்டும். பணிக் கொடையாக ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலம் சத்து ணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வலி யுறுத்தி வரும் 23ஆம் சென்னையில் முதலமைச்சரை சந்திக்க உள்ளோம். 

மறியல் போராட்டம்

ஜாக்டோ - ஜியோ அறிவித்திருக் கும் ஜன. 22 முதல் 24 வரை மூன்று நாட்கள் அரசு ஊழியர்-ஆசிரியர் சந்திப்பு பிரச்சார இயக்கம். ஜன. 30 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டத்திலும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள்.

பிப். 5  முதல் 9 வரை அரசியல்  கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு  கோரும் இயக்கம்,  பிப். 10 அன்று மாவட்ட அளவில் நடத்தப்படும் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு, அதைத் தொடர்ந்து பிப். 15  அன்று நடைபெறும் ஒரு நாள் அடை யாள வேலை நிறுத்த போராட்டம். பிப்.26 முதல் காலவரையற்ற வேலை  நிறுத்த போராட்டத்தில் சத்துணவு ஊழி யர்கள் முழுமையாக பங்கேற்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.