tamilnadu

img

கொரோனா ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு.....

சென்னை:
இ-பதிவு உள்ளிட்ட சந்தேகங்களுக்காகவும் கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை எடுத்துச் செல்ல உதவி கேட்டும் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் கொரோனா தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்கு சென்னை மாநகரகாவல்துறை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப் பட்டுள்ளது.இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-வருகிற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் கொரோனா தொடர்பான உதவிகளுக்கு 9498181236, 9498181239 ஆகிய எண்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.24 மணி நேரமும் செயல் படும் இந்த எண்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை கேட்டு பெறலாம்.இ-பதிவு உள்ளிட்ட சந்தேகங்களுக்காகவும் கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் பிற மருந்துகளை எடுத்துச்செல்ல உதவி கேட்டும் மருத்துவ மனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண் டர்களை எடுத்துச்செல்வதற்கு உதவிகள் கேட்டும் மேற்கண்ட எண்களில் தொடர்புகொள்ளலாம்.காவல்துறையினர் இதுபோன்ற நேரங்களில் தேவையான உதவிகளை செய்வதற்கு தயாராக உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;