tamilnadu

img

வடகிழக்கு பருவமழை 19ஆம் தேதி முதல் விலக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை, ஜன.17-
வடகிழக்கு பருவமழை 19ஆம் தேதி முதல் விலக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறுகையில், தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிவரை நீடிப்பதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
மேலும் 19 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கு வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

;