tamilnadu

பொங்கும் நுரை ஆபத்தில்லை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை,டிச.4- காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே உதயமாகும் அடை யாறு, பட்டினப்பாக்கம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. சென்னை பெரு நகருக்குள் நுழைந்து கடலில் கலக்கும் வரை கழிவுநீர் ஓடையாக மாறிவிடுகிறது.  இந்நிலையில் அடை யாறு முகத்துவாரத்தில் கடற்கரையோரத்தின் இரண்டு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக சோப்பு நுரை போன்ற நுரைகள் பொங்கி காணப்படுகிறது. கடற்கரையோரம் ஒதுங்கும் நுரையிலும், கடல்நீரில் மிதக்கும் நுரைகளிலும் சிலர் ஆர்வத்துடன் கால் பதிகின்றனர். இவ்வாறு நுரை பொங்குவதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளதாக மீனவர்கள் மற்றும் கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்தனர்.  இதுகுறித்து அறிந்த தமிழ்நாடு மாசுக்கட்டு ப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடந்த 29ம் தேதி முதல் வெவ்வேறு காலகட்டங்க ளில் அடையாறு முகத்து வாரத்தில் இருந்து இருபுறங்களிலும் சுமார் 1 கிலோ மீட்டர் வரையில் நுரைகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்தினர்.  அந்த ஆய்வின் முடிவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் அடையாறு ஆற்றின் முகத்து வாரத்தில் பல நாட்களாக தேங்கி மக்கும் நிலையி லும், அழுகிய நிலையிலும் இருந்த நுண்ணுயிரிகள் மற்றும் கரையோரம் படிந்திருந்த சர்பாக்டன்ட்ஸ் ஆகியவை மழை நீரோடு சேர்ந்து கடலுக்குள் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த சர்பாக்டன்ட்ஸ் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு அலைகளுடன் மோதிய தால் நுரை பொங்கி கரை யோரம் பரவியதாக கூறப்பட்டிருக்கிறது.  இதனை தொடர்ந்து, கடல்நீரில் ஆக்சிஜன் அளவு இயல்பாகவே இருப்பதால் நுரை பொங்கிய கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கடலில் உள்ள உயிரினங்களுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் லேசான கழிவுநீர் துர்நாற்றம் மட்டுமே உணரப்பட்டதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரி யத்தின் ஆய்வில் கூறப்பட்டு ள்ளது.