tamilnadu

img

புதுவை காங்.-திமுக கூட்டணியில் குழப்பமில்லை: ஸ்டாலின்....

சென்னை:
புதுவை காங்கிரஸ்-திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

புதுச்சேரி மாநிலத்தில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலோடு சேர்ந்து புதுவையிலும் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழகம், புதுவையில் காங்கிரஸ்-திமுக கூட் டணி அமைத்து போட்டியிட்டது. அது மக்களவைத் தேர்தலிலும் நீடித்தது. வருகிற சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே கூட்டணி நீடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.இந்நிலையில், திமுகவை வலுப்படுத்தும் வகையில் எஸ். ஜெகத்ரட்சகன் எம்.பி.யை புதுவை பொறுப்பாளராக அறிவித்தது. ஜெகத்ரட்சகனின் சொந்த ஊர் புதுவை அருகே உள்ள வழுதாவூராகும். அவரது பல்வேறு தொழில்களும் புதுவையில் உள்ளன. எனவே அவருக்கு புதுவை மக்களோடு அதிக தொடர்புகள் உண்டு.  பொறுப்பாளர் பதவியை ஜெகத்ரட்சகன் ஏற்கும் நிகழ்ச்சி புதுவையில் நடந்தது. இதற் காக திமுகவினர் பிரம்மாண்ட பேரணியையும் நடத்தினார்கள். பின்னர் அங்குள்ள ஓட்டலில் கூட்டம் நடத்தப் பட்டது.

அதில் பேசிய வடக்கு மாநில அமைப் பாளர் எஸ்.பி.சிவக்குமார், ஜெகத்ரட்சகனை திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்தார். மேலும் இந்த கூட்டத்தில் பேசிய ஜெகத்ரட்சகன் 30 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிடும். அனைத்து தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் என்று கூறியிருந்தார்.காங்கிரசுடன் கூட்டணி இருக்கும் நிலையில் ஜெகத்ரட்சகனை முதலமைச் சர் வேட்பாளர் என்று அறிவித்ததும், 30 தொகுதியிலும் தனித்து போட்டி என்று கூறியதும் கூட்டணியில் சர்ச்சையை உருவாக்கியது.புதுவையில் காங்கிரசுடன் திமுக கூட்டணி அமைக்காது என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. இது புதுவை காங்கிரஸ்- திமுக கூட்டணியில் மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்கியது.

இதுசம்பந்தமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது புதுவை மாநில அரசியல் என்பது வேறுபட்டது. புதுவையில் கட்சியின் நடவடிக்கைகளை மேம்படுத்தி கட்சியை வலுவாக்குவதற்காக சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் ஜெகத்ரட்சகனிடம் இந்த பணிகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இது கட்சிப்பணிதானே தவிர தேர்தல் பணி அல்ல. புதுவை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

;