சென்னை, மே.7-
தமிழகத்தில் ஒரே நாளில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,23,965 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 197 பேர் உயிரிழந்துள்ளர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15,171 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 22,381 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 11,73,439 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று புதிதாக 6,738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.