tamilnadu

img

பாக்கெட் உணவு பொருட்கள்:

சென்னை, ஜன.2 - அதிக எடை கொண்ட பாக்கெட் உணவு பொருட்கள் தொடர்பாக புதிய நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. பாக்கெட் செய்யப்பட்ட பொருட் களை உற்பத்தி செய்பவர்கள், இறக்குமதி செய்பவர்களின் விலைப்பட்டியலில் ஒட்டுமொத்த விலையுடன் ஒரு கிலோ அல்லது ஒரு லிட்டர் விலையையும் குறிப்பிட  வேண்டும். இந்த புதிய நடை முறையை ஒன்றிய அரசு ஜனவரி 2 முதல் அமல்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த நடைமுறை  பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அது நடை முறைக்கு வந்துள்ளது.

அதன்படி ஒரு கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட பாக்கெட் செய்யப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள், அதிகபட்ச சில்லறை  விலையுடன், ஒரு கிலோவுக்கு ‘யூனிட் விற்பனை விலை’ என்ன என்பதை அச்சிட வேண்டும். அதே போல ஒரு லிட்டருக்கு மேல் அளவு கொண்ட பொருட் களை உற்பத்தி செய்யும் போது, அதற்கு அதிகபட்ச சில்லறை விலை யுடன் ஒரு லிட்டருக்கு யூனிட் விற்பனை விலை என்ன என்பதை யும் குறிப்பிட வேண்டும். உதாரண மாக 5 கிலோ பாக்கெட் கோதுமை மாவு பாக்கெட்டில் மொத்த விலை யில், ஒரு கிலோவின் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும். மேலும், ஒரு கிலோவுக்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட உணவு பொருளுக்கு அதன் மொத்த  விலையில், ஒரு கிராம் விற்பனை விலையும் இடம்பெற வேண்டும்.

ஒரு  லிட்டருக்கும் குறைவான பாக்கெட் செய்யப்பட்ட பொருளுக்கு ஒரு மில்லி லிட்டர் விலையையும் குறிப்பிட வேண்டும்.  பேனா மற்றும் பென்சில்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கை கொண்ட பாக்கெட்டுகளில் ஒரு பென்சில் அல்லது பேனாவின் யூனிட் விலையை குறிப்பிட வேண்டும். இந்த புதிய நடைமுறையால் பொருட்களை வாங்குபவர்கள் சரி யான முறையில் தேர்ந்தெடுத்து பொருட்களை வாங்க முடியும். இந்த புதிய நடைமுறை கட்டாயமாகிறது.

இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபரா தம் விதிக்கப்படும். பால், டீ, பிஸ்கட், சமையல் எண்ணெய், கோதுமை மாவு,  குளிர்பானம், குடிநீர், குழந்தை களுக்கான உணவு, பருப்பு வகை கள், தானியங்கள், பிரட் உள்ளிட்ட 19 வகையான பாக் கெட் செய்யப்பட்ட பொருட்கள் ‘குறிப்பிட்ட அளவு’ என்ற விதிமுறை களும் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உற்பத்தியாளர் கள் சந்தையில் விற்கும் அனைத்து  பாக்கெட் செய்யப்பட்ட பொருட் களின் அளவை தீர்மானிக்க முழு சுதந்திரம் உள்ளது. அனைத்து அளவு களிலும் பாக்கெட் செய்யப்பட்ட பொருட்கள் கிடைப்பதால் நுகர் வோர் தங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து வாங்கலாம்.