tamilnadu

img

நெல்லை, தூத்துக்குடி, செங்கல்பட்டில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக நாளை நெல்லை, தூத்துக்குடி, செங்கல்பட்டில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தலைநகர் சென்னை, தூத்துக்குடி, நெல்லை, நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 
தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25-ந்தேதி கனமழை பெய்தது. இதனால் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
கனமழை காரணமாக செங்கல்பட்டு நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து,  அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

;