சென்னை, ஆக.11- ‘நீட்’ நடைமுறையை ரத்து செய்ய, தமிழ்நாடு அரசு நிறை வேற்றி அனுப்பிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மேடை நடத்திய கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது
“நீட் மற்றும் தேசியக் கல்விக் கொள்கை 2020: தமிழ்நாடு முன்னு ள்ள சவால்கள்” என்ற தலைப்பில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் சென்னையில் மருத்துவர் பி.குகானந்தம் அரங்கில் நடை பெற்றது.
இதில், முனைவர் பி. இரத்தின சபாபதி, தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினர் மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத் தின் கதிர்வீச்சு பாதுகாப்புத் துறை மேனாள் தலைவர் மற்றும் விஞ்ஞானி முனைவர் சு. வெங்க டேசன், இயற்பியல் ஆசிரியரும், ஸ்டெம் பயிற்றுனருமான முனைவர் கு. ரவிக்குமார் பொதுப் பள்ளிக் கான மாநில மேடை பொதுச் செய லாளர் பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோர் கருத்துரையாற்றி னார்.
வணிகச் சந்தையாக ‘நீட்’ பயிற்சி மையங்கள்
‘நீட்’ நடைமுறை மருத்துவ கல்விக்கும், மருத்துவக் கல்வி பயி லும் மாணவர்களுக்கு எந்த பய னும் அளிக்கவில்லை என்பதை கடந்த எட்டாண்டுகளாக நடந்து வரும் ‘நீட்’ அடிப்படையில் மருத் துவ மாணவர் சேர்க்கை நிரூபித்துள் ளது. பன்னாட்டு நிதி மூலதனத்து டன் மிகப் பெரும் வணிகச் சந்தை யாக ‘நீட்’ பயிற்சி மையங்கள் உரு வெடுத்து உள்ளன.
‘நீட்’ போன்ற நடைமுறை இள நிலைப் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கு உகந்தது அல்ல. ‘நீட்’, ‘கியூட்’ போன்றவற்றை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். ‘நீட்’டை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
பள்ளிகள் தொடங்கி பல்கலைக் கழகங்கள் வரை ஆசிரியர் பணி யிடங்களை நிரந்தர ஆசிரியர் களைக் கொண்டு நிரப்பப்பட வில்லை. இதனால் மாணவர்கள் முழுமையான கல்வியைப் பெற இயலவில்லை. எனவே, அனைத்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் இக் கருத்த ரங்கம் கோரிக்கை விடுத்தது.
மாநில அரசுப் பல்கலைக் கழ கங்களுக்கு முழுமையான மானி யங்களை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். துணைவேந்தர் நிய மனங்களில் சிக்கல்களை களைந்து உடனடியாக நியமிக்க வேண்டும். தேவைப்பட்டால் நீதிமன்றங்களை நாடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.
மாநிலக் கல்விக் கொள்கை!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களை முற்றிலும் பல வீனமானப் படுத்தி, கல்வியை முழு மையாக வணிகச் சந்தையிடம் ஒப் படைக்கும் மிகவும் சூழ்ச்சிகரமான ஆவணம்தான் தேசியக் கல்விக் கொள்கை 2020.
எனவே, தமிழ்நாடு அரசின் சமச்சீர் கல்வி கொள்கைக்கு நேரெதி ரான இத்தகைய பாகுபாடு தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையிலும் பின்பற்றப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே, சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் தருவதற்கு ஏற்ற மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என்றும் இந்த கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.