tamilnadu

img

முறைகேடுகளின் வடிவமாக மாறிய நீட் தேர்வு மாணவர்கள் போராட்டம்!

சென்னை, ஜூன் 11 - முறைகேடுகளின் வடிவமாக உள்ள ‘நீட்’ தேர்விலிருந்து, தமிழ்நாட்டிற்கு விலக்கு கேட்டு, செவ்வாயன்று (ஜூன் 11) தமிழ்நாடு  முழுவதும் ஒன்றிய அரசு அலு வலகங்கள் முன்பு இந்திய மாண வர் சங்கத்தினர் (SFI) ஆவேசமிக்க போராட்டம் நடத்தினர்.

ஒவ்வொரு ஆண்டும் ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியாகும் போதெல்லாம்,  கூடவே முறை கேடுகளும் வெளிச்சத்திற்கு வந்து, மாணவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது வழக்கமாகி விட்டது. அதிலும், 2024 மே மாதம் ‘நீட்’ தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே வினாத்தாள் வெளி யானது. ஜூன் 4 அன்று வெளியான தேர்வு முடிவுகளிலும் பல்வேறு மோசடிகள், குளறுபடிகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த ஆண்டு ஹரியானாவில் உள்ள ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 8 பேர் உட்பட 67 பேர்  முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ள னர். மேலும், கருணை மதிப்பெண் பெற்ற 6 பேருக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே, இதில் முறைகேடு நடந்துள்ளது என்றும், எனவே, நீட்  தேர்வை ரத்து செய்ய வேண்டும்,  தேர்வில் நடைபெற்ற முறைகேடு கள் மீது புலன் விசாரணை நடத்த  வேண்டும், இந்த தேர்வு நடத்தும் பணியிலிருந்து, தேசிய தேர்வு முகமையை (NTA) வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலு வலகங்களை முற்றுகையிட்டு, இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாயன்று போராட்டம் நடத்தினர். சென்னை, நுங்கம் பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை  முற்றுகையிட்டு சங்கத்தின் மத்தி யக்குழு உறுப்பினர் எஸ். மிருதுளா தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். 

தள்ளு-முள்ளு

காவல்துறையின் தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் தள்ளு-முள்ளு ஏற்பட்டதையடுத்து மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கள் எஸ். ஆனந்தகுமார், ரா. பாரதி (தென் சென்னை), அருண் குமார்,  தமிழ் (மத்திய சென்னை) உள்ளிட்ட 50 பேர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று திருச்சிராப் பள்ளி, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, திண்டுக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, சேலம், கன்னியாகுமரி திருநெல்வேலி, திரு வண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு  மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.

எங்கள் போராட்டம் ஓயாது!

இந்தப் போராட்டத்தின் போது, இந்திய மாணவர் சங்கத்தின் மத்தி யக்குழு உறுப்பினர் எஸ். மிருதுளா செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார்.

அப்போது “என்டிஏ என்ற தனி யார் அமைப்பு நீட் தேர்வை நடத்து கிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு  நடைபெறும் போதே வினாத்தாள் வெளியானதாக பலர் கைது செய்யப் பட்டனர். இதனிடையே, மோசடி களை திசைத்திருப்புவதற்காக மக்க ளவைத் தேர்தல் முடிவுகள் வெளி யான அன்றே நீட் தேர்வு முடிவு களும் வெளியிடப்பட்டன. அப்போதே தேர்வு முடிவுகள் மீது  பெரும் சந்தேகம் எழுந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில் மதிப்பெண் கள் அளித்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடு நடந்திருப்பது உறுதி யாகி உள்ளது. எனவே, நீட் தேர்வு  நடத்தும் பொறுப்பிலிருந்து என்டிஏ- வை நீக்க வேண்டும். நீட் தேர்வு  முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். விலக்கு கோரும் மாநிலங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதுவரைக்கும் இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டம் தொடரும்” என்றார்.