“’நீட்’ தேர்வு ஏழை எளிய சாமானிய மக்களுக்கு இன்னும் எட்டாகனியாக உள்ளது. ஏனென்றால் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஆண்டுக்கு 10 லட்சம் மாணவர்கள் வெளியே செல்கின்றனர். ஆனால், ‘நீட்’ தேர்வு எழுதுவதற்கு முன் வருகிற மாணவர்கள்- இந்த நான்காண்டு காலத்திலே பார்க்கிற போது ஒரு லட்சம் தான் என்று சொன்னால் பத்தில் ஒரு சதவிகிதம் தான் உள்ளது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.