சென்னை, ஜன. 31 - பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி புதனன்று (ஜன.31) கோரிக்கை அட்டை அணிந்து எம்ஆர்பி செவிலியர்கள் பணியில் ஈடுபட்டனர். எம்ஆர்பி செவிலியர் களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப நிரந்தர செவிலியர் பணி யிடங்களை உருவாக்க வேண்டும், கொரோனா காலத்தில் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட வர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்,
காலி யாக உள்ள தொகுப்பூதிய செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், எம்ஆர்பி செவிலியர் களுக்கும் மகப்பேறு விடுப்பு மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி நேரத்தை வரையறுக்க வேண்டும், ஒப்பந்த, தொகுப்பூதிய முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு எம்.ஆர்.பி செவி லியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் இந்த போராட் டத்தை நடத்தினர்.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சுபின் கூறுகையில், “தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதி யில் கூறியவற்றை தான் நிறைவேற்ற கோருகிறோம். கோரிக்கை அட்டை அணிந்து பிப்.1 அன்றும் பணியாற்றுவோம்.
பிப்.3 அன்று மாவட்ட அளவில் ஆயத்த மாநாடு, பிப்.11-17 ஆகிய தேதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர் களை சந்தித்து கோரிக்கை களை ஆதரவு திரட்டுகி றோம். பிப்.21 அன்று முதலமைச்சரை சந்திக்கும் பெருந்திரள் முறையீடு போராட்டத்தை நடத்த உள்ளோம்” என்றார்.