சென்னை, ஜூலை 9- சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும், பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும், மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் காப்பீட்டுத் தொகையை குறைக்க வேண்டும், புதிய சாலை போக்குவரத்து சட்டம் 2017ஐ கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி சென்னை பெருநகர் மோட்டர் வாகன தொழிலாளர் சங்கம் (சிஐடியு), தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழுதுபார்ப்போர் முன்னேற்றச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் மாவட்டத் தலைவர் பி.என்.உண்ணி தலைமை யில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, துணைப் பொதுச் செயலாளர் ஏ.ராயப்பன், உதவி தலைவர்கள் ரமேஷ், ரவிவர்மன், சு.லெனின்சுந்தர், சு.பால்சாமி, இருசக்கர வாகன நலச்சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.ஜானகிராமன், தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ஆர்.முரளி தரன், தமிழ்நாடு கால்டாக்சி மற்றும் அனைத்து வாகன ஓட்டுநர் நலச்சங்கத்தின் பொதுச் செயலா ளர் பி.ஆர்.சாமி, அனைத்திந்திய வாகன ஓட்டுநர் பேரவை தலை வர் சி,குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதுச் செயலாளர் ஆர்.குப்புசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மோட்டார் தொழிலை முற்றிலும் கார்ப்பரேட் முதலாளிகள் வசம் ஒப்படைக்கும் நோக்கத்துடன் மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடும் எதிர்ப்பையும் மீறி பாராளுமன்றத்தில் தனக்குள்ள பெரும்பான்மையை பயன்படுத்தி சட்டத்திருத்தத்தை நிறைவேற்றிவிட்டது. மத்திய அரசின் நோக்கம் வெளிப்பட்ட நிலையில் அனைத்து எதிர்க் கட்சி களும் ஒன்றிணைந்து அந்த சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதால் மாநிலங்களவையில் சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போதைய வடிவத்தில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அரசு போக்குவரத்து மற்றும் தனி யார் போக்குவரத்து நிறுவனங்கள் அழிக்கப்படும். ஆட்டோ, வாடகை கார், ஒப்பந்த ஊர்திகள் போன்ற அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களே இயக்கும். சாலை ஓர ஒர்க் ஷாப்புகள், உதிரி பாகக் கடைகள், ஒட்டுனர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடும். லாரி, சிறிய சரக்கு வாகனங்கள் உட்பட அனைத்து போக்குவரத்து தொழில்களும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். தனியார் கார், இரு சக்கர வாகனம் வைத்திருப்போர் உட்பட அனைவரும் பாதிப்பிற்குள்ளாவார்கள். வாகனப் பதிவு, எப்.சி, ஓட்டுனர் உரிமம் வழங்கு வது போன்ற ஆர்டிஓ அலுவல கங்கள் மூலம் செய்யப்படும் வேலை கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறு வனங்கள் வசம் ஒப்படைக்கப்படும். தற்போது மாநில அரசால் வழங்க ப்பட்டு வரும் பர்மிட்டுகளுக்கு எதிராக மத்திய அரசும் பர்மிட் வழங்கும்.
இதன் மூலம் மாநில பர்மிட்டில் இயங்கும் வாகனங்களின் தொழில் நசுக்கப்படும். மாநில உரிமைகளும் பறிக்கப்படும். மேலும் வாகனத்தை பழுதுபார்க்க வேண்டும் என்றால் இனி அந்தந்த நிறுவனத்தில்தான் பழுதுபார்க்க முடியும் என்ற நிலை உருவாகும். ஒருபுறம் 3ஆம் பார்ட்டி இன்சூரன்சை பல மடங்கு உயர்த்திவிட்டு, சாலை விபத்து நடைபெற்றால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் 5 லட்ச ரூபாய்க்கு மேல் வழங்க வேண்டியதில்லை என மத்திய அரசு அறிவித்து விட்டது. ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்த 2 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும் என புதிய சட்டத் திருத்தம் கூறுகிறது. மேலும் பழைய ஓட்டுநர் உரிமத்தை ஒப்படைத்து விட்டு புதிய பயோ மெட்ரிக் ஓட்டுநர் உரிமத்தை பெற வேண்டும். இந்த சட்டத் திருத்தங்கள் அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் இந்த புதிய சட்டத்திருத்த மசோ தாவை எதிர்க்கின்றன. ஏற்கனவே சுங்கச்சாவடிகள் கொள்ளை அடித்து வருகின்றன. லாரி உரிமை யாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது மொத்தமாக 19,500 கோடி ரூபாயை நாங்கள் கட்டி விடுகி றோம். யாரிடமும் சுங்கக் கட்டணம் வசூலிக்காதீர்கள் என கோரிக்கை வைத்தனர். ஆனால் அதையும் மத்திய அரசு ஏற்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.