சென்னை, மார்ச் 3- நாடாளுமன்றத் தேர்தல் பணி யை நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளத் துவங்கிவிட்டன. ‘இந்தியா’ கூட்டணி சில மாநி லங்களில் தொகுதி உடன்பாட்டை முடித்துவிட்டது. பல மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் கட்சிகள் தொகுதி உடன்பாட்டை சுமூகமாக மேற் கொண்டு வருகின்றன.
இந்நிலையில் அதிமுகவினரின் ‘கோபத்துக்கு’ உள்ளான பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிடப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள ‘அல்லு சில்லு’ கட்சிகள், லெட்டர்பேடு கட்சிகள் மற்றும் பிரபல ஆட்களைப் பிடிக் கும் தீவிர வேலையில் பாஜக இறங்கியுள்ளது. இதற்காக பிரத மர் மோடியை தமிழகத்திற்கு அடிக் கடி அழைத்து வந்து கூட்டம்போட்டு கடைவிரித்து வருகிறார்கள். கடந்த வாரம் தமிழ்நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற் கொண்ட பிரதமர் மோடி, பல்ல டம் மற்றும் நெல்லையில் நடை பெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்களில் தனி மரமாக நின்றார்.
காரணம், அண்ணாமலை, வானதி, நயினார் நாகேந்திரன் என்று அந்தக் கட்சியின் தலைவர்கள் கூட்டணிக் காக கூவி கூவி பார்த்தும் பலன் இல்லை. மாற்றுக் கட்சியிலிருந்து வளைத்துப்போடலாம் என்று நினைத்தார்கள். அதுவும் நடக்க வில்லை.
கதவு, ஜன்னலை திறந்து வைத்தும் யாரும் வரவில்லை. இத னால் இலவு காத்த கிளிகளாக பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். இன்று மீண்டும் வருகிறார் இந்த நிலையில், பிரதமர் மோடி மீண்டும் மார்ச் 4 அன்று தமிழ்நாட் டின் தலைநகர் சென்னைக்கு வரு கிறார். ஒரே வாரத்தில் 2-வது முறை யாக வருகிறார். இதற்காக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடி மாலை 5 மணிக்கு இந்த கூட்டத்தில் உரை யாற்றுகிறார்.
கல்பாக்கம் அணுமின் நிலை யத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணி களை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் நந்த னம் ஒய்.எம்.சி.ஏ. திடலை வந்தடை கிறார். பொதுக்கூட்டம் முடிந்த தும் இரவு சென்னை விமான நிலை யத்தில் இருந்து தெலுங்கானா மாநி லத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். 5 அடுக்கு பாதுகாப்பு பிரதமர் மோடி வருகையை யொட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தில்லியில் இருந்து வந்துள்ள பிர தமரின் பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார், சிறப்பு பிரிவு போலீசார் 5 அடுக்குகளாக பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கின்ற னர். சென்னை விமான நிலை யத்தில் இருந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரையில் பிர தமர் மோடி காரில் பயணம் செல்வ தால் அந்த வழித்தடத்தில் தீவிர மாக கண்காணிக்க போலீசார் அறி வுறுத்தப்பட்டுள்ளனர்.
10 கி.மீ. தூரத்துக்கு சாலை மார்க்கமாகவே பிரதமர் பயணம் மேற்கொள்வதால் சாலையோ ரங்களில் இருபுறமும் போலீசார் நிறுத்தப்படுகிறார்கள். பிரதமர் பயணம் மேற்கொள் ளும் பாதையில் பெரிய கட்டி டங்கள் இருந்தால் அதன் மீது ஏறி நின்றும் கண்காணிக்கப்பட உள் ளது. காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமை யிலான உயர் அதிகாரிகள் பாது காப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.