கே. பாலகிருஷ்ணன் பேட்டி
சென்னையில் நடைபெற்ற மறியலின் போது, செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் கூறியதாவது:
“ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கை நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்தை இழிவுபடுத்துகிறது; தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மொத்தமாக புறக்கணிக்கிறது; விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களை வஞ்சிக்கிறது.
ஏழை - எளிய நடுத்தர மக்களை வஞ்சித்துவிட்டு, அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரிச்சலுகை அளித்துள்ளனர். இந்த பட்ஜெட்டால் இந்திய மக்களின் வாழ்வதாராம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். வேலையில்லாத் திண்டாட்டம் பெருகும். ஒன்றிய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பல லட்சம் பணியிடங்களை நிரப்ப தயாராக இல்லை என்பது தெளிவாகிறது.
எனவே, இத்தகைய நாசகர பட்ஜெட்டைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் சார்பில் முதற்கட்டமாக மறியல் நடைபெறுகிறது. மோடி அரசின் நாசகர பொருளாதார கொள்கையை எதிர்த்த மகத்தான போராட்டத்தை இடதுசாரி கட்சிகள் தொடர்ந்து நடத்தும். மோடி அரசை அகற்றும் வரை போராட்டம் ஓயாது.\
தமிழ்நாடு முதலமைச்சர், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்துள்ளதோடு, நிதி ஆயோக் கூட்டத்தையும் புறக்கணித்தார். அதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆட்சி நடத்தும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் அந்த கூட்டத்தை புறக்கணித்தனர். இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம்”
இவ்வாறு அவர் கூறினார்.
உள்துறை அமைச்சரின் மலிவான அரசியல்! “கேரளத்தின் வயநாட்டில் ஏற்பட்டிருப்பது தேசியப் பேரிடர். இதுபோன்ற துயர் இதற்கு முன்பு நடைபெறவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் கேரளாவிற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்ததுடன், நிவாரணப் பொருட்களுடன், மீட்புக்குழுவினரையும் அனுப்பியுள்ளார். மேலும், தேவையான உதவிகளை செய்வோம் என்று கூறியிருப்பதை இடதுசாரி கட்சிகள் சார்பில் பாராட்டுகிறோம், நன்றி தெரிவிக்கிறோம்.. இதற்கு நேர்மாறாக ஒன்றிய உள்துறை அமைச்சர் பேசுகிறார். இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு எதிராக, அரசியல் வியாபாரம் செய்யும் வகையில் மலிவான அரசியல் செய்கிறார்” என்றும் கூறினார்.
பதவி நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்!
இரா. முத்தரசன் குற்றச்சாட்டு
ஒன்றிய அரசின் பட்ஜெட்டிற்கு எதிராக இடதுசாரிக் கட்சிகள் நடத்திய கோயம்புத்தூரில் நடைபெற்ற மறியலின் போது, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“ஒன்றிய அரசின் இந்த நிதி நிலை அறிக்கை, ஒட்டுமொத்த தேசத்திற்கான அறிக்கை அல்ல. ஆண்டு பட்ஜெட் என்பது அனைத்து மாநிலங்களுடைய தேவைகளை அறிந்து சமர்ப்பிக்கப்பட வேண்டியது. மாறாக மோடி அரசு தங்களுடைய நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக இந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளம் உள்ளிட்ட பல மாநி லங்களைப் புறக்கணித்துள்ளது. பீகார் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்கி உள்ளனர். இவர்களின் ஆட்சியை ஆதரிக்கும் காரணத்தால் மட்டுமே அதிக நிதியை ஒதுக்கி உள்ளனர். ஜிஎஸ்டி உள்ளிட்ட ஏராளமான வரியை செலுத்தி கொண்டிருக்கின்ற தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. எந்த பட்ஜெட்டிலும் இப்படி ஒரு மாநிலம் புறக்கணிக்கப்பட்டது கிடையாது. விவ சாய விளைபொருளுக்கு விலை நிர்ணயச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படும் என அளித்த வாக்குறுதி குறித்து, இந்த பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை. இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்கு எதிரான பட்ஜெட்!.”
இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.
அதானி, அம்பானி குடும்பத்திற்கு ஆதரவான பட்ஜெட்
ஜி. ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒன்றிய அரசின் அலுவலகங்கள் முன்பு இன்று போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்றன. ஒன்றிய அரசை பொருத்த வரை ஐந்தாயிரம் கோடி ரூபாய் செலவு செய்து தன்னுடைய பெண்ணுக்கு மணவிழா நடத்திய அம்பானி - அதா னிக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு சலுகை அளிக்கக்கூடிய விதமாகத்தான் மோடி அரசின் பட்ஜெட் உள்ளது. வேலையில்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கோ, நலிந்து வரும் விவசாயத்தை பாதுகாப்பதற்கக்கோ, சிறு- குறு தொழில்களை பாது காப்பதற்கோ, விலைவாசி உயர்வால் கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கோ இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கிடையாது. உத்தரப் பிரதேச காவல்துறையில் 60 ஆயிரம் இடங்களுக்கு 47 லட்சம் பேர் வேலைக் காக விண்ணப்பித்துள்ளனர். நாடு முழு வதும் வேலையின்மை கடுமையாக அதி கரித்துள்ளது. இந்த சூழலில் வேலை வாய்ப்பை அளிப்பதற்கு இந்த பட்ஜெட்டில் எதுவும் இல்லை. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு எதிராகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இருக்கக்கூடிய இந்த பட்ஜெட்டுக்கு எதிராக, இடதுசாரிகள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கிய கோட்பாடு என்பது கூட்டாட்சிதான். அந்த கூட்டாட்சிக்கே விரோதமாக பாஜக செயல்படுகிறது. பாஜக ஆளாத மாநி லங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது முற்றி லும் மறுக்கப்பட்டுள்ளது”. இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.