சென்னை, பிப்.22 - சென்னை விழாவில் “மாற்றுத்திற னாளிகளுக்கான உரிமைத் திட்டத்தை உலக வங்கியுடன் இணைந்து 1763 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்த உள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் புதிய மாநி லக்குழு அலுவலகம் திறப்பு பிப்ரவரி 20 அன்று சென்னையில் எழுச்சியுடன் நடைபெற்றது.
இதில் அமைச் சர்கள் மா.சுப்பிரமணியன், கீதா ஜீவன் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் “சட்டமன்ற நிகழ்வுகளை சைகை மொழிபெயர்ப்பாளர் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உங்கள் சங்கத்தின் பொதுச் செய லாளர் பா.ஜான்சிராணி எடுத்துக் கூறி னார். அதை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, சைகை மொழி ஒளிபரப்பு செய்யப்படு கிறது” என்றார். “மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைத் திட்டத்தை உலக வங்கி யுடன் இணைந்து 1763 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு செயல்படுத்த உள்ளது.
இதற்காக மாவட்டங்களில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திற னாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது” என்றார். “இந்தியாவில் முதியோருக்கு இரண்டு மருத்துவமனை அமைக்கப் படும் என்று 2014ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு மாடி யை ஒதுக்கி உள்ளார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில், சென்னை சைதாப் பேட்டையில் 9 ஏக்கர் பரப்பில் மாநில அரசின் பெரும் பங்களிப்போடு அந்த மருத்துவமனை அமைக்கப் பட்டுள்ளது. அந்த மருத்துவமனை யை பிப்.25 அன்று பிரதமர் திறந்து வைக்க உள்ளார். அந்த மருத்துவ மனையிலும் மாற்றுத் திறனாளி களுக்கான அனைத்து வசதிகளும் நடைமுறைப்படுத்தப்படும்” என்றார்.
“அரசு அறிவிக்கும் திட்டங்கள், அரசு அமைக்கும் குழுக்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடம் தர வேண்டும் என்று ஜான்சிராணி கோரினார். இனி மக்கள் நல்வாழ்வுத் துறையில் தொடங்கப்படும் திட்டங்களில் எல்லாம் ஒரு மாற்றுத்திறனாளிக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயன் பெறுபவராக மட்டுமல்ல, திட்டத்தை செயல்படுத்துபவராகவும் மாற்றுத் திறனாளிகள் இருப்பார்கள்” என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்
அமைச்சர் கீதா ஜீவன்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை யியல் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் பேசுகையில், “மாற்றுத்திறனாளிகள் நேரடியாக கூறும்போதுதான் ஒரு சில பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடிகிறது. எனவே, ஜான்சிராணி நேரடியாக பேசுகிறார். அதற்கு தீர்வு காண்கிறோம். இந்த புதிய அலுவல கத்தின் வாயிலாக சங்கத்தின் செயல் பாடு அதிகரிக்கும், ஏராளமானோர் பலன் பெறுவார்கள்” என்று பாராட்டு தெரிவித்தார்.
“பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை அரசு கவனித்து வருகிறது. உரிய நட வடிக்கை எடுக்கப்படும். போட்டித் தேர்வை பிப்.4ந் தேதிதான் எழுதி யுள்ளனர். தேர்வு முடிவு வந்தபிறகு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.