tamilnadu

img

தென்சென்னையில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்!

சென்னை, மார்ச் 22 - தென்சென்னை மக்களவைத் தொகுதியில் 5 லட்சம் வாக்கு வித்தி யாசத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெறுவார் என்ற சாதனையை உருவாக்குவோம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். இந்தியா கூட்டணியின் சார்பில் தென்சென்னை மக்களவைத் தொகுதி யில் திமுக வேட்பாளராக த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடு கிறார்.

இதனையொட்டி வெள்ளியன்று (மார்ச் 22) சைதாப்பேட்டையில் கூட்டணி கட்சிகளின் மாவட்ட நிர்வாகி கள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதன் சுருக்கம்  வருமாறு: இந்தியா கூட்டணியில் கட்சிகள், இயக்கங்கள் என 36 அமைப்புக்கள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணி துண்டு துண்டாக சிதறி கிடக்கிறது. அதிமுக அணியில் இருந்து பல அமைப்புகள் தற்போது இந்தியா கூட்டணியை ஆதரிக்கின்றன.

தொகுதி ஒதுக்காத போதும் அணியில் இருந்து ஒரு அமைப்பு கூட விலகி செல்ல வில்லை. உச்சநீதிமன்றம் தினசரி ஒன்றிய அரசுக்கு எதிராக பேசுகிறது. ஆனாலும்  ஒன்றிய ஆட்சியாளர்கள் திருந்த வில்லை. மாநில அரசு திட்டங்க ளுக்கு ஒன்றிய அரசு நிதி தர மறுக்கிறது. தமிழகத்திற்கு எதிரான தாக ஒன்றிய அரசு உள்ளது. உச்சநீதி மன்றம் இதுவரை எந்த ஒரு ஆளுநரை யும் இவ்வளவு கடுமையாக கண்டித்தது கிடையாது.

வீரவசனம் பேசிய ஆளுநர், இன்றைய தினம் பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். இரண்டு மாநிலங்களில் ஆளுந ராக இருந்தவருக்கு எதிராக தினசரி போராட்டம் நடந்து வந்தது. கடும் எதிர்ப்பால் வேலை செய்ய முடியாமல் ஓடி வந்துள்ளார். தென்சென்னை மக்க ளவைத் தொகுதி வரலாற்றில் கடந்த முறை அதிகபட்சமாக 2.62 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றார்.

இந்த முறை 5 லட்சம் வாக்கு வித்தி யாசத்தில் வெற்றி பெறுவோம். தென் சென்னை உள்ளிட்டு 40 தொகுதி களிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்  இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை தா.வேலு, அரவிந்த்ரமேஷ், பிரபாகர் ராஜா, கருணாநிதி, தாயகம்கவி, ஹசன் மௌ லானா, துணை மேயர் மகேஷ்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன் மற்றும் இமையா கக்கன், முத்தழகன் (காங்கிரஸ்), எஸ்.கே.சிவா (சிபிஐ), பா.சுப்பிரமணியன், கழக குமார் (மதிமுக), இளையா (விசிக), அகமது அலி ஜின்னா (மமக), பிஸ் மில்லாகான் (ஐயுஎம்எல்) உள்ளிட் டோர் பேசினர்.