tamilnadu

img

அமைச்சர்  மனோ தங்கராஜூக்கு தொற்று பாதிப்பு....

சென்னை:
தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சரும், பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான த.மனோ தங்கராஜ் காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று 
உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.ஏற்கனவே, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கும், சுற்றுலாத் துறை அமைச்சர் மா.மதிவேந்தனுக்கும் அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் வீட்டு தனிமையில் உள்ளனர். இந்தநிலையில் தற்போது 3-வது அமைச்சராக த.மனோ தங்கராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

;