சென்னை, ஆக. 28 -
கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காததால், தமிழக மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
“பள்ளிக் கல்வித்துறைக்கு கடந்த ஜூன் மாதம் வர வேண்டிய ரூ. 573 கோடி நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. அது மட்டுமல்ல கடந்த ஆண்டு இறுதித் தவணை யாக வரவேண்டிய ரூ. 249 கோடியையும் ஒன்றிய அரசு வழங்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது” என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி கண்டனம்
தேசிய கல்விக் கொள்கை (என்இபி) விதிகளை ஏற்காத காரணத்தால் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட ‘சமக்ர சிக்ஷா அபியான்’ (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ் நிதியை விடுவிக்காத ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார நடவடிக்கையை கண்டிப்பதாக, அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டியின் பொதுச் செயலாளர் தருண் காந்தி நஸ்கர் அறிக்கை விடுத்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை விதிகளை ஏற்கவில்லை என்பதற் காக, ஒன்றிய கல்வி அமைச்சகமானது, தமிழ கத்திற்கு வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதியான ரூ. 573 கோடியை- ஜனநாயக விரோத மான முறையில் தடுத்து வைத்துள்ளது என்பது நமக்குத் தெரிய வந்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த சர்வாதிகார நடவடிக்கையை கண்டிக்கிறோம். ஒதுக்கப்பட்ட நிதியை உடன டியாக வழங்க வேண்டும் என வலியுறுத்து கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ. 573 கோடியை விடுவிக்க மறுப்பதா?
பாஜக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாததால் பள்ளி கல்விக்கு வழங்க வேண்டிய முதல் தவணை ரூ. 573 கோடி யை விடுவிக்காத ஒன்றிய பாஜக அரசுக்கு அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளி யிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு 2024-2025 ஆம் ஆண்டிற் கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதம் தமிழக அரசுக்கு விடு வித்திருக்க வேண்டும். ஆனால், தனது பங்குத் தொகையை விடு விக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று ஒன்றிய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா கல்வியில் சிறந்த நாடு. உலகிலேயே மனித வளம் அதிகம் உள்ள நாடு. இந்த நாட்டில் தங்களுடைய கொள்கை களை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தை சீர் குலைக்கும் முயற்சியில் தற்போ தைய ஒன்றிய அரசு ஈடுபட்டுள் ளது கண்டிக்கத்தக்கதாகும்.
மாநிலங்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டியது மத்திய அர சின் கடமையாகும். நிபந்தனை களின் அடிப்படையில் தான் கல்வி வளர்ச்சிக்கு நிதி தர முடி யும் என்று கூறுவது ஏற்கக் கூடியதல்ல. மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி சுமார் 48 ஆண்டுகள் ஆகின்றன.
‘கல்வி உரிமைச் சட்டம்’ கீழ் தனியார் பள்ளிகளில் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசு பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது என்று செய்தி கள் தெரிவிக்கின்றன. ‘கேடில் விழுச்செல்வம் கல்வி யொரு வற்கு மாடல்ல மற்றையவை’ என்ற குறளின் பொருளை முழு மையாக உள்வாங்கி, மாண வச் செல்வங்களின் வாழ்க்கை யோடு விளையாடுவதை இனியா வது நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.