tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேட்டூர் அணை  நீர்வரத்து  மேலும் குறைவு!

மேட்டூர், ஆக. 26 - கர்நாடக மாநிலத்தின் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறையத் துவங்கியுள்ளது.

ஞாயிறன்று காலை விநாடிக்கு 6 ஆயிரத்து 598 கன அடி விகிதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து திங்களன்று காலை விநாடி க்கு 4 ஆயிரத்து 284 கன அடியாக சரிந்துள்ளது. அதே நேரம், அணையிலிருந்து காவிரி டெல்டா பாச னத்திற்கு விநாடிக்கு 12 ஆயி ரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாச னத்திற்கு விநாடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 117.90 அடியாக சரிந்துள்ளது.

‘மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூர், ஆக. 26 - “தமிழ்நாட்டில், ஏறத்தாழ 1 கோடியே 17 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் புதிதாக 1 லட்சத்து 40 ஆயிரம் பயனர்கள் இணைக்கப்பட்டு, அவர் களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 

இது சம்பந்தமாக யாரே னும் மனு அளிக்க விரும்பி னால், மனு அளிக்கலாம் என்று அரசு சார்பிலேயே கேட்டுக் கொள்ளப்பட்டு உள் ளது. அவ்வாறு அளிக்கும் மனுவில் எந்த ஒரு குறைபா டும் தவறும் இல்லாமல் இருந் தால், கண்டிப்பாக உரிமைத் தொகை கிடைக்கும். அவர்களும் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்” என்று வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சர் சு. முத்துசாமி தெரிவித்துள்ளார்.