tamilnadu

img

மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்  

தமிழகத்தில் முழுஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து, சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் வார நாள்களில் வழக்கம்போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழக அரசு முழு ஊரடங்கு ரத்து செய்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று முதல்(ஜன.28) வழக்கம்போல இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வார நாட்களில் அதாவது திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5.30  மணிமுதல் 11 மணிவரை இயக்கப்படும்.  

நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணிமுதல் 11 மணிவரையிலும், மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரையிலும் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.  மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.  அதனைதொடர்ந்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.  

அரசு பொது விடுமுறை நாட்களில் காலை 5.30  மணி முதல் இரவு 10 மணி வரை 10  நிமிட இடைவெளிலும்,  இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.  

கொரோனா தொற்றை தடுப்பதற்காகவும், அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு, மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கு, மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முக கவசம் அணிந்து இருப்பதுடன், தனிமனித இடைவெளியை கடைபிடித்து, பயணம் செய்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;