சென்னை,நவ.22- வரும் நவம்பர் 26 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையத் தின் தென் மண்டல தலை வர் பாலச்சந்திரன் தெரி வித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக் கத்தில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தில் அதன் இயக்குநர் பாலச் சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள பகுதி களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, புது ச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்க ளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத் தில் நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல் ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி யுள்ள மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை யும் பெய்ய வாய்ப்புள்ளது
சென்னை மற்றும் புற நகரைப் பொறுத்தவரை அடுத்து வரும் இரு தினங் களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 26 ஆம் தேதி அந்த மான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக கூடும். இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 27 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்ட லமாக வலுப்பெற கூடும்.
எனவே ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 26 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத் தப்படுகிறார்கள். தற்போது தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவ.22 வரை 24 செ.மீ மழை பதிவாகி யுள்ளது. இந்த காலக் கட்டத் தில் இயல்பு அளவு என்பது 31 செ.மீ ஆகும். எனவே இந்த காலகட்டத்தில் நடப் பாண்டு 15 செ.மீ மழை குறை ந்துள்ளது” என்றார்.