tamilnadu

கேண்டீன் தின்பண்டங்களில் எலி

சென்னை, நவ.14-

சென்னை ராயபுரத்தில் ஸ்டான்லி  அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் நாள் தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், இந்த மருத்துவமனையில், தனியார் சார்பில் உணவகம் நடத்தப்பட்டு வரு கிறது. உணவகத்தில்பஜ்ஜி, போண்டா போன்ற உணவு வகை கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நவ.12 அன்று உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த பஜ்ஜி, போண்டா ஆகியவற்றை எலி ஒன்று சாப்பிட்டுக் கொண்டிருந்தது பார்த்த அங்கிருந்த மக்கள் அதிர்ச் சியடைந்தனர்.

மேலும், இது தொடர்பான சம்பவத்தை தங்களின் செல்போன் களில் வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்டிருந்தனர். இதனையடுத்து, அவர்கள் இது தொடர்பாக உணவகம் நடத்தும் நபரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். அதற்கு உரிய பதில் அளிக்காமல் எலியை விரட்டி விட்டு பஜ்ஜி, போண்டா போன்றவற்றை எடுத்து அகற்றியதாக கூறப்படு கிறது.

இதனைத்தொடர்ந்து, இது குறித்து ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். இதற்கு ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் உணவகத்தை ஆய்வு செய்து அதனை தற்காலிகமாக மூட உத்தர விட்டார். 

இந்நிலையில்,உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை எலி சாப்பிடுவது தொடர்பான வீடியோ தற்போது சமூக  வலைத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், உணவுப் பாதுகாப்புத் துறை இது தொடர்பாக அனைத்து  மருத்துவக் கல்லூரி முதல்வர் களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், ‘அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனை, மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளில் டெண்டர் விடப்பட்ட உணவகங்களை உடனே ஆய்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது. 

மேலும் அதில், ‘சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அந்த  உணவகத்தை இழுத்து பூட்டி சீல்  வைக்க வேண்டும். உணவுகளை  தரமற்ற முறையில் நோயாளிக ளுக்கு விநியோகம் செய்தால் கேண்டீன் உரிமம் ரத்து செய்யப் படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள் ளது.