முதுநிலை பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
சென்னை, ஜூலை 23- சென்னை தலைமைச் செயலகத் தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந் திப்பில் முதுநிலை பொறியியல் கலந் தாய்வு தேதிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அதன்படி, முதுநிலை பொறியியல்
அதன்படி, முதுநிலை பொறியியல் கலந்தாய்வுக்கு வரும் 27 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை விண் ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 10 இல் தர வரிசை பட்டியல் வெளியீடு, ஆகஸ்ட் 13 ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஆகஸ்ட் 19 முதல் 23 வரை பொதுப்பிரி வினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 85 விழுக்காடு மாணவர் சேர்க்கை நடை பெற்றுள்ள நிலையில் மீதம் இருக்கும் நாட்களில் 100 விழுக்காடு சேர்க்கை நடை பெறுகிறது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி முத லாம் ஆண்டு பொறியியல் மாணவர் களுக்கு வகுப்புகள் தொடங்குவதாக வும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடகம் நடத்துவது எடப்பாடி பழனிசாமிதான்
அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்
சென்னை, ஜூலை 23- அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆய்வை விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி தான் நாடகம் நடத்துகிறார் என அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், “தென்பெண்ணை ஆறு குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். தென்பெண்ணை ஆற் றுக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு. கர்நாடக அரசு, ஆணையம் அமைக்கக் கூடாது என கேட்டுக் கொண்டதன் அடிப்படை யில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாங்கள் ஆணையம் அமைப்பதில் உறுதியாக உள்ளோம். காரணம் பேச்சுவார்த்தை மூலம் பிரச்ச னைகள் தீர்ப்பது நல்லது என்றும் பிடி வாதக்காரர்களிடம் அது முடியாத காரி யம். சுமார் 58 முறை பேசியிருக்கிறோம். அதன்பிறகு ஆணையம் அமைக்க கேட்டோம்.
அம்மா உணவகத்தில் முதல மைச்சர் நடத்திய திடீர் ஆய்வை நாட கம் என எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கி றார். எடப்பாடிதான் நாடகம் நடத்து வார். அவர்களது கட்சியில் மட்டும் தான் நாடகங்கள் நடக்கும் என்று அமைச்சர் கூறினார்.
அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
சென்னை, ஜூலை 23- மேற்கு திசை காற்றின் வேக மாறு பாடு காரணமாக, ஜூலை 22 முதல் 29 வரைக்கும் தமிழகத்தில் ஓரிரு இடங்களி லும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதி களிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வலுவான தரைக்காற்று 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விதவிதமாக பணம் பறிக்கும் சைபர் கிரைம் மோசடி கும்பல்
முன்னாள் டிஜிபி எச்சரிக்கை
சென்னை, ஜூலை 23- சைபர் கிரைம் மோசடி கும்பல் பல் வேறு விதமாக பொதுமக்களிடம் பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டு வருகின்ற னர். குறிப்பாக சுங்கத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரி கள் என தொடர்பு கொண்டு பொதுமக் களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் செய லில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெற்றோர்களை குறி வைத்து சைபர் கிரைம் மோசடி கும்பல் நூதன முறையில் மிரட்டி பணம் பறிக்கின் றனர்.வாட்ஸ்அப் கால் மூலம் தொடர்பு கொண்டு உங்கள் மகன் அல்லது மகள் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு இருப் பதாக கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக, மகள் என்றால் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், வங்கி மோசடியில் தொடர்பு இருப்பதாகவும் கூறி மிரட்டுகின்றனர்.
வாட்ஸ் அப் காலில் சுங்கத்துறை அதி காரிகள் போல் பேசி பெற்றோர்களை அச்சுறுத்துகின்றனர். அதுமட்டுமல்லாது, மகன் அழுவது போன்று ஒலிபரப்பி அவர் களை நம்ப வைக்கின்றன.
உண்மையை அறியாத சில பெற் றோர்கள் வாட்ஸ்அப் காலில் பேசும் நபர் கூறியபடி செய்து மகனை காப்பாற்ற லாம் என நினைக்கின்றனர். பணத்தை கொடுத்து பெற்றோர்கள் சிலர் ஏமாறு கின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள் ளார். அதோடு ஏமாற்றி பணம் பறித்த வீடியோ ஆதாரத்தை சமூக வலைதளத் தில் பதிவிட்டு எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார். வீடியோ போன்ற அழைப்பு வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
நிபா வைரஸ் பரவல் எதிரொலி
தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
கோவை, ஜூலை 23- கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற் பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள சுகாதா ரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி னர். இதில் சிறுவனுக்கு இணை நோய்கள் இருந்த நிலையில் திடீரென காய்ச்சல் வந்தது தெரியவந்தது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நட வடிக்கையாக தமிழக-கேரள எல்லை பகுதி களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு தமிழக சுகாதா ரத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. எல்லையோரத்தில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப் பிக்கப்பட்டது.
அதன்படி, கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர கண்கா ணிப்புக்கு பிறகு தமிழகத்திற்குள் அனுமதிக்கப் படுகிறது.
கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாக னங்களின் உள்ளேயும், டயர்களிலும் சானிடைசர் தெளிக்கப்பட்ட பிறகு தமிழக எல்லைக்குள் அனு மதிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி
சென்னை, ஜூலை 23- சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய வுள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக காஞ்சிபுரம் வட்டம், நெல்வாய் கிராமத்தில் 69.05 ஹெக் டேர் அளவில் நிலத்தையும், திருப்பெரும்புதூர் வட்டம், எடையார்பாக்கம் கிராமத்தில் 67.13 ஹெக்டேர் நிலத்தை யும் கையகப்படுத்த அறிவிப்பு ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க பரந்தூர், ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப் பட்டுள்ளது. ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
டிசம்பர் 2023 இல், பாதுகாப்பு அமைச்சகத்தால் தல அனுமதிக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தல அனுமதி கோரி ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கு டிட்கோ விண்ணப்பித்தது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்துத் துறை, ராணுவம் மற்றும் விமானப்படை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பரந்தூரில் ஆய்வு மேற்கொண்ட னர். இந்த நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு ஒன்றிய அரசு தள அனுமதி வழங்கியுள்ளது.