சென்னை, ஜூலை 11- சுதந்திர போராட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்படியாக பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிகல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்எல்ஏ சுரேஷ்ராஜன்,“ கேரளாவிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க பல்வேறு போராட் டங்களை நடத்திய மார்ஷல் நேசமணி உள்ளிட்ட தலைவர்க ளின் சேவைகளின் பற்றி குறிப்பிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமா? என்று வினவினார். இதற்கு பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், “தலைவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்களது வாழ்க்கை வரலாற்றை, பாடத்திட்டத்தில் படிப்படியாக சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மார்ஷல்நேசமணியின் வாழ்க்கை வரலாறும் அரசு பாடத்திட்டத்தில் இடம் பெறும்” என்றார்.