tamilnadu

சிறுமியின் சதூர்யத்தால் திருமணம் தடுத்து நிறுத்தம்

உளுந்தூர்பேட்டை ஜூன் 7- உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர்  கிராமத்தில் 16 வயது சிறுமி தனக்கு நடைபெற  இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்கு பெற்றோருக்கு தெரியாமல் காவல் கண்காணிப்பா ளருக்கு சதூரியமாக கைபேசியில் தகவல் கொடுத்த தால் காவல்துறையினரால் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் சட்டப்பூர்வ மான திருமண வயதை எட்டும் முன்பே அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்த னர். அதற்காக மணமகனும் தேர்வு செய்யப்பட்டு வியாழனன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இதில் விருப்பம் இல்லாத அந்த சிறுமி சம யோசிதமாக செயல்பட்டு மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஜெயக்குமாருக்கு கைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது தனக்கு வியா ழக்கிழமை (ஜூன் 6)  நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பது குறித்தும், அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் எனவே இதனை தடுத்து நிறுத்தி  தன்னை காப்பாற்றுமாறும் காவல் கண்காணிப்பா ளரிடம் புகார் தெரிவித்தார். உடனடியாக காவல் கண்காணிப்பாளர் நேரடி யாக எடைக்கல் காவல் நிலையத்திற்கு வந்து அச்சிறு மியின் பெற்றோரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு திரு மணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று  அவர்களுக்கு விளக்கிக் கூறினார். இதை அடுத்து  அச்சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளை மேற் கொண்டு படிக்க வைப்பதாகவும், திருமணம் உரிய வயதடைந்த பின்னால் செய்து வைப்பதற்கும் உறுதி  அளித்ததையொட்டி பெற்றோருடன் அச்சிறுமியை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.