tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கான மராத்தான் 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான மராத்தான் 
1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

உடல் குறைபாடுகளை கடந்து, சவால் களை சமாளித்து சாதனை படைக்கும் மாற்று த்திறனாளிகளின் அசாதாரண மனப்பான் மையை பாராட்டும் விதமாக சென்னை ஆர்ஜி மருத்துவமனை சார்பில் ஆர்ஜி மாற்று த்திறனாளிகள் மராத்தான் 2025 நடை பெற்றது. இதில் 1500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். உடல் ஊனம் என்பது தங்களுக்கு ஒரு தடை அல்ல என்பதை வெளிப்படுத்தும் வித மாக அவர்களின் திறமை மற்றும் பன்முகத் தன்மையைக் கொண்டாடும் வகையிலும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகை யிலும் நடைபெற்ற இந்த மாரத்தான், அனை வருக்கும் உற்சாகமும் உத்வேகம் அளித் தது. ஆண் மற்றும் பெண் என இருபாலருக் கும் தனித்தனியாக 11 பிரிவுகளில் போட்டி கள் நடைபெற்றது. இந்த பிரிவுகளில் மொத்தம் 44 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இதில் பங்கேற்ற ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் பங்கேற்பிற் கான பதக்கம் வழங்கப்பட்டது, இது அவர்க ளின் அசைக்க முடியாத உறுதியையும் எதை யும் நம்மாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக் கையையும் ஏற்படுத்துவதற்காக வழங்கப் பட்டது  காவல்துறையின் பொருளாதார குற்றத் தடுப்பு தலைமை இயக்குநர் எம். சத்ய பிரியா உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர். பிரபாகரன், சென்னை ஆர்ஜி மருத்துவமனையின் சிறுநீரகவியல் மூத்த ஆலோசகர் அருண் குமார், குழந்தைகள் நலக் குழு தலைவர் ராஜ்குமார் முத்துக்கிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் பி. சிம்மச்சந்திரன் மற்றும் வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏ. ஜே.எம்.எச்.ஹசன் மௌலானா உள்ளிட்ட ஏராள மானோர் பேர் கலந்து கொண்டனர்.