tamilnadu

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

போரூர்,டிச.7- சென்னை, எம்.ஜி.ஆர் நகர் சூளைப்பள்ளம் சிவா விஷ்ணு கோவில் தெருவைச் சேர்ந்த 1 1 வயது சிறுமி கேகே நகரில் உள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள ஜாகிர் உசேன் தெருவைச் சேர்ந்த வர் முருகன் (67). மாணவி பள்ளி முடிந்து தினந்தோறும் முருகன் வீட்டை கடந்து வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் வெள்ளியன்று மாலை வழக்கம்போல் அவ்வழியே தனியாக சென்று கொண்டிருந்த மாணவியிடம் முருகன் நலம் விசாரித்துள்ளார். பிறகு மாணவியை வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு வந்த மாணவி நடந்த சம்பவம் குறித்து தாயி டம் தெரிவித்துள்ளார். உடனடியாக மாணவியின் தாய் எம்.ஜி.ஆர். நகர் காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;