tamilnadu

img

நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்?

சென்னை:
தமிழகத்தில்  நவம்பர் மாதம்உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியாகி யுள்ளது.அதிமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியும் கோபமும் அதிகரித்து ள்ளது. இதனால் அதிமுக அரசுபல்வேறு காரணங்களைக் கூறிஉள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் தோல்வியை தழுவி, ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் தந்த பயத்தால் அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த மறுக்கிறது என்று அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து உள்ளாட்சித் தேர்தல்நடத்தப்படவில்லை.  உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் உள்ளாட்சிப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. விரைவில் தேர்தலை நடத்த வேண்டும்என்று மக்களும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்குகளிலும், உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் பலமுறை அவ
காசம் கோரியது.இந்த நிலையில் வரும் அக்டோபர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை மாதம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

பலமுறை இதேபோல நீதிமன்றத்தில் அவகாசம் கோரப்பட்டதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என்றே பலரும் நினைத்துவந்தனர். இந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி யுள்ளது.வார்டு வரையறை செய்வது, வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது என உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழக தேர்தல் ஆணையம் தற்போது தயாராகி வருகிறது. உச்சநீதிமன்றத்தில் கூறியது  போலவே அக்டோபர் மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நவம்பர் மாதம் முதல் வாரத்தில்உள்ளாட்சித் தேர்தல் நடைபெறலாம் என்றும், 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.