tamilnadu

img

விளையாட்டு மைதானத்தில் குப்பைகள் கொட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூலை 7- விளையாட்டு மைதானத்தில் குப்பைகள்  கொட்டுவதைக் கண்டித்து வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவொற்றியூர் இந்திரா நகரில் உள்ள கான்கார் விளையாட்டு மைதானத்தில் குப்பைகள் கொட்டுவதை கண்டித்து, இந்திய நாயக வாலிபர் சங்கத்தினர் அந்த பகுதி இளைஞர்களை திரட்டி போராட்டத்தில் ஈடு பட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். விளையாட்டு மைதானத்தில் குப்பைகளை கொட்டக் கூடாது என்று சங்க நிர்வாகிகள் வலியுறுத்திய போது குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப் படும் என்றும்,  மைதானம் பாதுகாக்கப்படும் காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன் கூறுகையில், இந்த இடத்தை இந்த பகுதியில் வசிக்கும் இளை ஞர்கள் தூய்மைபடுத்தி கடந்த 40 ஆண்டு களுக்கும் மேலாக விளையாட்டு மைதான மாக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏராளமான முதியவர்கள், பெண்கள் காலை, மாலை நடை பயிற்சி மேற்கொண்டு வரு கின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை விளை யாட்டு மைதானத்தில் ரயில்வே நிர்வாகம் குப்பைகளை கொட்டியுள்ளது. 

இந்த இடம் ரயில்வேக்கு சொந்தமான இடம் என்றாலும், ஏராளமான காலி இடங்கள் இருக்கின்றன. விளையாட்டு மைதானத்தில் குப்பைகளை கொட்டினால் இளைஞர்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும் நடைபயிற்சி மேற்கொள்வோரும் சிர மத்திற்கு ஆளாவார்கள். எனவே குப்பை களை வேறு இடத்தில் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர் ஸ்டாலின், நிர்வாகிகள் அருமைராஜ், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.