tamilnadu

இன்று முதல் 3 நாட்கள் மதுக்கடைகளுக்கு பூட்டு

சென்னை, ஏப்.15-மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு 2 நாட்கள் முன்னதாகவே டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. மூடப்படும் மதுக்கடைகளை தேர்தல் முடிந்த பின்னர் தான் 19 ஆம் தேதியன்று திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் செவ்வாயன்று (ஏப். 16) முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. 

;