சென்னை, ஏப். 7 - ரத்தம் வரும் வரை பால் கறப்பது போல், ஒன்றிய அரசு மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பி உள்ளார். மத்தியசென்னை தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு வாக்கு கேட்டு ஞாயிறன்று (ஏப்.7) ஏழுகிணறு, சூளை பகுதிகளில் இரா.முத்தரசன் பேசியதன்று சுருக்கம் வருமாறு: இந்தியா கூட்டணியை எதிர்த்து, நள்ளிரவு கூட்டணி, கள்ளக் கூட்டணி என இரண்டு கூட்டணிகள் போட்டி யிடுகின்றன.
அந்த கூட்டணிகளுக்கு எந்த கொள்கையும் கோட்பாடும் இல்லை. டெபாசிட் கிடைக்காது என்று தெரிந்தும், இரண்டாம் இடத்திற்காக அந்த அணிகள் போட்டியிடுகின்றன. எனவே, திமுக மற்றும அதன் கூட்டணி கட்சிகள் மீது அவதூறு பரப்புகின்றன. தேர்தல் முடிவு கள் முன்னமே அறிந்து கொண்டு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் போட்டியிடாமல் நழுவிக் கொண்டார். வெள்ளத்தால் சென்னையும், தென்மாவட்டங்களும் தத்தளித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரணம் கேட்டு பிரதமரை முதலமைச்சர் சந்தித்தார்.
எம்.பி.க்கள் குழு உள்துறை அமைச்சரை சந்தித்தது. நிவாரண நிதியை தருவதாக பிரதமரும், உள்துறை அமைச்சரும் வாக்குறுதி தந்தார்கள். பல மாதங்களாகியும் நிதி வரவில்லை. இவர்களுக்கு தமிழ் நாட்டு மக்களிடம் ஓட்டு கேட்க தார்மீக உரிமை உள்ளதா? தமிழ்நாட்டிற்கு முன்பெல்லாம் பகலில் வந்து செல்லும் பிரதமர், இப்போதெல்லாம் இரவு தங்குவது ஏன் என்று தெரியவில்லை. பிரதமர் தமிழ்நாட்டை சுற்றி சுற்றி வருகிறார். எத்தனை முறை வந்தாலும் நீங்கள் சைபர் பிரதமர்தான்.
இது குறித்து கேட்டால் கச்சத்தீவு பற்றி பேசுகிறார். 10 வருடமாக யாருக்கு பேன் பார்த்துக் கொண்டிருந்தார்? இதுதொடர்பாக இலங்கைக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை. பெட்ரோல் விலை, வேலையின்மை, விலைவாசி உயர்வு இவை குறித்தெல்லாம் கேட்டால், திசை திருப்புகிறர். திருவிழாவில் திருடி விட்டு திசை திருப்பும் திருடனுக்கும் பிரதமருக்கும் என்ன வேறுபாடு உள்ளது? எந்த பிரச்சனை என்றாலும் பிரத மரிடம் போன் போட்டு பேசுவேன் என்கிறார் ராமதாஸ்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புக் கொள்கிறாரா என்று அவர் கேட்டு சொல்ல வேண்டும். ரயிலில் குழந்தை கள், முதியோருக்கான கட்டண சலு கையை ஒன்றிய அரசு ரத்து செய்து விட்டது. கொரோனா காலத்தில் உயர்த்திய கட்டணத்தை குறைக்க வில்லை.
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை குறைத்துவிட்டு, ஏசி பெடடிகளை அதிகரித்துவிட்டனர். ரத்தம் வரும்வரை பால் கறப்பது போல் மக்களின் ரத்தத்தை ஒன்றிய அரசு உறுஞ்சுகிறது. சிஏஏ சட்டத்தின் மீது திமுக உறுப்பினர் திருச்சி சிவா கொண்டு வந்த திருத்தத்தை அதிமுக ஆதரித்த இருந்தால் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமையை கிடைத்திருக்கும். மாறாக பாஜக கொண்டு வந்த சட்டத்தை அதிமுக ஆதரித்தது. கூட்டணியில் இருந்து விலகிய பிறகு இதுவரை பாஜகவை அதிமுக விமர்சிக்காதது ஏன்? நிவாரண நிதி தர மறுக்கும் ஒன்றிய அரசை, ஜனநாயகத்திற்கு விரோதமாக போட்டி அரசு நடத்தும் ஆளுநரை, உச்சநீதிமன்றம் உத்தர விட்ட பிறகும் பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்காததை ஏன் அதிமுக கண்டிக்கவில்லை? மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயர் சூட்ட மறுத்த பிறகும் கூட எடப்பாடி கண்டிக்காதது ஏன்? எனவே தான் கள்ளக்கூட்டணி என்கிறோம்.
வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஒன்றிய அரசின் ஏவல் நாயாக உள்ளது. சிபிஐக்கு 11 கோடி ரூபாய், சிபிஎம்-க்கு 15 கோடி ரூபாய் வருமானவரித்துறை அபராதம் விதித்துள்ளது. திரிச்சூர் மாவட்ட சிபிஎம் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் இருக்க கூடாது என்று நினைக்கிறார். எனவே பாசிசம் வீழ்த்த வேண்டும். இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். துறைமுகம் கிழக்கு பகுதிச் செய லாளர் எஸ்.ராஜசேகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், திமுக செய்தி தொடர்பு இணைச் செய லாளர் தமிழன் பிரசன்னா, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, சிபிஐ மாவட்டச் செயலாளர் பா.கருணாநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.