சென்னை, மார்ச் 17 - மாநில உரிமைகளையும் மகளிர் உரிமை களையும் ஒட்டுமொத்த மக்களின் உரிமைகளை யும் கடந்த பத்தாண்டு காலமாக காலில் போட்டு மிதித்து, சிதைத்து அழித்துக் கொண்டிருக்கும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை தூக்கியெறிவோம்; தமிழ்நாடு, புதுச்சேரியில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை துடைத்தெறிவோம் என்று பிருந்தா காரத் அழைப்பு விடுத்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் மாநில உரிமை - மகளிர் உரிமை அரசியல் கூட்டம், தேர்தல் பிரச்சார துவக்க கூட்டமாக வெள்ளியன்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உரையாற்றினார். அப்போது அவர், 2024 மக்களவைத் தேர்தல் வழக்கமான தேர்தல் அல்ல இந்திய நாட்டின் அடிப்படை கட்டமைப்பாக இருக்கக் கூடிய மதச்சார்பின்மை, ஜனநாயகம், சமூக நீதி ஆகிய தூண்களை பாதுகாப்பதற்கான தேர்தல் என்று குறிப்பிட்டார்.
கடந்த பத்தாண்டு கால பாஜக ஆட்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு வரலாற்றிலேயே ஏற்பட்ட மிக மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்ற ஜனநாயகத்தை முற்றாக சிதைக்கும் நோக்கத்துடன் மோடி அரசு செயல்பட்டுள்ளது என்றும் விமர்சித்தார். பிரதமர் நரேந்திர மோடி, ஊழலைப் பற்றி பேசும் போது, “நானும் சாப்பிடமாட்டேன்; யாரை யும் சாப்பிடவிடமாட்டேன் (நானும் ஊழல் செய்யமாட்டேன், யாரையும் ஊழல் செய்ய விடமாட்டேன்)” என்று கூறுகிறார்.
ஆனால் நாடே அதிர்ச்சி அடையும் வகையில் தேர்தல் பத்தி ரங்கள் தொடர்பான உண்மைகள் வெளியாகி இருக்கின்றன. உண்மையிலேயே மோடியும் அவரது கட்சியும்தான் கார்ப்பரேட் கம்பெனி களிடமிருந்து கோடிக் கணக்கில் அள்ளி அள்ளி சாப்பிட்டிருக்கிறார்கள் என்று பிருந்தா காரத் அம்பலப்படுத்தினார். மொத்த தேர்தல் பத்திர பணத்தில் 50சத வீதத்தை சூறையாடியுள்ள பாஜக, அமலாக்கப் பிரிவு, சிபிஐ உள்ளிட்ட மத்திய முகமைகளை ஏவி, கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டியும், வளைத்தும், நிதியைக் கைப்பற்றியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
எனக்கு நீ பணம் கொடு, உனக்கு நான் சலுகை செய்கிறேன் என்று கூறி, கார்ப்பரேட் கம்பெனி களுடன் கூட்டுக் களவாணித்தனம் செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்திருக்கிறது பாஜக என்று குறிப்பிட்ட பிருந்தா காரத், உத்தர காண்டில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்ட சுரங்கப் பணியை மேற்கொண்ட மிகப்பெரிய கார்ப்பரேட் கட்டுமான நிறுவனம் பாஜக வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக கோடிக் கணக்கில் வாரி வழங்கியது வெளிச்சத்திற்கு வந்திருப்பதை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார்.
மேற்கண்ட சுரங்கத்தில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களையும், அரசு மீட்க முடியாது என கைவிட்ட நிலையில், எலிவளை சுரங்க தொழிலாளியாக வேலை செய்யும் ஏழை, எளிய தொழிலாளியான வக்கில் ஹசன்தான் அந்த சுரங்கத்திற்கு ஊர்ந்து சென்று ஒவ்வொரு தொழிலாளியாக 41 பேரையும் மீட்டெடுத்தார்; அந்த மகத்தான வக்கில் ஹசனுக்கு பாஜக அரசு கொடுத்த பரிசு என்ன தெரியுமா? தில்லி யில் உள்ள அவரது மிகச் சிறிய வீட்டையும் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளியதுதான் என பிருந்தா காரத் கடுமையாக சாடினார். கடந்த பத்தாண்டுகளில் மோடி ஆட்சியில் 3 லட்சத்திற்கும் அதிகமான தினக்கூலி தொழி லாளர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள்; ஒவ்வொரு நாளும் 95 தினக்கூலி தொழி லாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டி ருக்கிறார்கள் எனக் குறிப்பிட்ட பிருந்தா காரத், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லை; தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வாழ்வாதார ஊதியம் கிடைக்க வில்லை; மாறாக விவசாயிகள் மீது டிரோன்கள் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகளை மோடி அரசு வீசியது; அவர்களை ரப்பர் குண்டு களால் சுட்டுத் தள்ளியது.
இதுதான் இந்த நாட்டின் விவசாயிகளுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு எனவும் குறிப்பிட்டார். குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்து இந்தியாவின் மதச்சார்பற்ற அடித்த ளத்தை தகர்க்கும் வேலையை தீவிரப்படுத்தி யுள்ளது மோடி அரசு எனக் குறிப்பிட்ட அவர், அருமை சகோதரர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான திமுக அரசும், எமது தோழர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசும் இச்சட்டத்தை தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அமல்படுத்த மாட்டோம் என்று முழக்கமிட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார். மாநில உரிமைகளைப் பொறுத்தவரை மோடி அரசு நிதி ரீதியாகவும், ஆளுநர் களை ஏவியும் மாநில அரசுகளை சிறுமைப் படுத்தவும், மாநில மக்களுக்கான திட்டங் களை செயல்படுத்தவிடாமல் முடக்கவும் முயற்சிக்கிறது என குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது பாராட்டுக்கு உரியது எனக் குறிப்பிட்டார்.
அதேபோல கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் தில்லியில் மாநில உரிமைகளுக்காக மாபெரும் போராட்டத்தை நடத்தியதையும் சுட்டிக் காட்டினார். கடந்த பத்தாண்டு காலத்தில் எரி பொருட்கள் மீதான பல்வேறு வரிகள் மூலமாக மக்களிடமிருந்து 28லட்சம் கோடி ரூபாயை ஜேப்படி செய்திருக்கிறது(பிக்பாக்கெட்) மோடி அரசு. மாநிலங்களுக்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி, பங்குத் தொகையையும் தர மறுக்கிறது என்றும் சாடினார். பெண்களின் பாதுகாப்பு பற்றி மோடி வாய்கிழியப் பேசுகிறார்; ஆனால் பெண்கள் மீதான தாக்குதல் கடந்த பத்தாண்டு காலத்தில் 28 சதவீதம் அதிகரித்திருக்கிறது; ஒவ்வொரு நாளும் 88 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் அவலம் நீடிக்கிறது; ஒவ்வொரு ஆண்டும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பெண்கள் உயிரோடு எரித்து படு கொலை செய்யப்படும் பயங்கரம் நீடிக்கிறது எனக் குறிப்பிட்ட பிருந்தா காரத், பாஜக அரசு மநுவாதத்தை உயர்த்திப் பிடிக்கிற அரசு, சமூக நீதிக்கு எதிரான அரசு, பிராமணிய ஆதிக்க கட்டமைப்பை பின்பற்றுகிற அரசு; இந்த அரசு நாட்டின் பெண்களுக்கு முதல் எதிரியாக இருக்கிறது என சாடினார்.
இத்தகைய பின்னணியில் நடைபெற உள்ள தேர்தலில் வெற்றிகரமாக மோடி அரசை வீழ்த்தும் பொருட்டு தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா அணி வெற்றிகரமாக தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் 39தொகுதிகள், புதுச்சேரி 1 தொகுதி என 40 தொகுதிகளையும் திமுக தலைமையிலான இந்தியா அணி கைப்பற்று வது உறுதி; களமிறங்குவீர் எனவும் பிருந்தா காரத் அழைப்பு விடுத்தார். இந்த பொதுக்கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமை தாங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், திமுக மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, எம்.சி., அண்ணாநகர் பகுதிச் செயலாளர்கள் ந.ராமலிங்கம் எம்.சி., ச.பரம சிவம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, இ.சர்வேசன், எஸ்.கே.முருகேஷ், கே.முருகன், வி.தனலட்சுமி, எஸ்.சிவசுப்பிரமணியம், வே. ஆறுமுகம், அண்ணா நகர் பகுதிச் செயலாளர் கே.மகேந்திரவர்மன், கிளைச் செயலாளர் எஸ்.சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.