“100 விழுக்காடு வாக்களிப்பை உறுதி செய்வோம்” விழிப்புணர்வு நடைப்பயணம் சென்னை, பெசன்ட்நகர், எலியட்ஸ் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நடைப்பயணத்தில் சென்னையிலுள்ள பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த இளைஞர் ரெட்கிராஸ் மாணவ - மாணவியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணியானது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் நியூஸ் 7 – தொலைக்காட்சியுடன் இணைந்து நடத்தப்பட்டது. இதனை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.