மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் சு.வெங்கடேசன், ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் சனிக்கிழமை தோழமைக் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு தோழமைக் கட்சித் தலைவர்களான வைகோ, கி.வீரமணி, தொல்.திருமாவளவன், கு.செல்வப்பெருந்தகை, பேரா,காதர் மொஹிதீன், பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா ஆகியோர் உற்சாகமாக வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.