போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு செய்பவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில், அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்தவர்களிடமிருந்து நிலத்தை மீட்கவும், பொது நிலங்களை அபகரிக்க போலி அரசு ஆவணங்களை தயாரித்தவர்கள் மீதும் குற்றவியல் வழக்குப் பதிய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நில நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.