tamilnadu

கர்நாடக அரசுக்கு ஆதரவாக எல்.முருகன் குரல்: கே.எஸ்.அழகிரி...

சென்னை:
தமிழகத்திற்கு விரோதமாகச் செயல்படுகிற கர்நாடக அரசுக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் எல். முருகன் குரல் கொடுப்பது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கு என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிவிமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் செய்தியாளர் களுடன்  பேசுகையில், ‘காவிரி நீரைப் பொறுத்த மட்டில் அதனை வீணாக்குவது என்பது தமிழகம்தான். இதில், நீர் பங்கீட்டை கர்நாடகா சரியாகத்தான் வழங்குகிறது. கடந்த 2 வருடங்களாகத் தமிழகத்திற்கு வரும் காவிரி நீர் வீணாகக் கடலில் கலந்து வருகிறது. குறிப்பாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வந்தபிறகு, முறையாகத் தமிழகத் திற்குத் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் கிடைத்து வருகிறது’ என்று ஆதாரமற்ற கருத்தை, முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிற வகையில் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

காவிரி பிரச்சனையைப் பொறுத்தவரை பிப்ரவரி 2018-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ஒவ்வொரு ஆண்டும் 177.25 டிஎம்சி தமிழகத்திற்கு வழங்க வேண்டும். ஆனால், அந்த நீரை உறுதியாகப் பெறமுடியாத நிச்சயமற்ற நிலையில்தான் ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் இருந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் தீர்ப்பின் அடிப்படையில் மாதாமாதம் வழங்க வேண்டிய நீரைக் கர்நாடக அரசு வழங்குவதில்லை. எப்போதுமே தென்மேற்குப் பருவமழை தொடங்குவதை எதிர்பார்த்து செப்டம்பர் வரை நிலைமையை ஆய்வு செய்த பிறகு தமிழகத் திற்குக் கர்நாடகம் நீரை வழங்கி வருகிறது.

பற்றாக்குறை மாதங்களில் தரவேண்டிய தண்ணீரைக் கர்நாடகம் எப்போதும் வழங்குவதில்லை. ஆனால்,அதே நேரத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்கிற காலங் களில் குறிப்பாக அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கர்நாடகா அணைகளில் உபரியாக நீர் இருப்பதால் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாத நிலையில் அதிக அளவில் தண்ணீரைக் காவிரியில் திறந்து விடுகிறது. இதை ஒட்டுமொத்தக் கணக்கில் கர்நாடகம் சேர்த்து விடுகிறது.பற்றாக்குறை காலங்களான ஜூன், ஜூலை மாதங்களில் தரவேண்டிய தண்ணீரைத் தராமல் கடுமையான மழைப்பொழிவு இருக்கிற காலங்களில் தண்ணீரைத் திறந்துவிட்டுத் தமிழகத்தை வடிகாலாகக் கர்நாடக அரசு கருதுவதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்குக் கீழே மேகதாதுவில் ரூ.6,000 கோடி செலவில் 70 டிஎம்சி நீரைத் தேக்கி வைக்கிற அளவுக்கு அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச் சகத்திடம் கர்நாடக அரசு அனுமதி கோரியிருக்கிறது.

இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது. மேகதாதுவில் அணை கட்டப் படுமேயானால் காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாறுவதற்கு வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன்.கர்நாடகம் வழங்குகிற காவிரி நீர் தமிழகத்தில் வீணடிக்கப்படுவதாக முருகன் கூறுகிறார். தமிழகத்தில் காவிரி நீர் வீணடிக்கப்படுவது திமுக ஆட்சிக்கு வந்த அறுபது நாட்களில் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில், ஜூன் 12ஆம் தேதி காவிரி நீர் திறந்து சமீபத்தில்தான் கடைமடையை அடைந்திருக்கிறது.பாஜக தலைவர் கூறுகிற குற்றச்சாட்டு அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சிக்குப் பொருந்துமே தவிர, அறுபது நாள் கூட நிறைவு பெறாத திமுக ஆட்சிக்குப் பொருந் தாது. இத்தகைய குற்றச் சாட்டை தமிழக பாஜக தலைவர் கூறுவதுதான் மிகவும் விந்தையாகவும், வியப்பாகவும் இருக்கிறது. இதைவிட பச்சை துரோகத்தை தமிழகத்திற்கு பாஜக செய்துவிட முடியாது.

எனவே, தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி தரவேண்டிய தண் ணீரை வழங்குவதற்குக் கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இந் நிலையில், காவிரி படுகை விவசாயிகளின் நலனுக்கு விரோதமாகக் கருத்துகளைக் கூறியிருக்கிற தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.தமிழக மக்களின் வாழ் வாதாரத்திற்கு விரோதமாகக் கூறப்பட்ட கருத்துகளை அவர் திரும்பப் பெறவில்லை எனில், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

;