tamilnadu

img

மருத்துவம், சட்டக்கல்லூரிகள் மாணவர் சங்க காஞ்சிபுரம் மாவட்ட பேரவை வலியுறுத்தல்

மருத்துவம், சட்டக்கல்லூரிகள் 

மாணவர் சங்க காஞ்சிபுரம் மாவட்ட பேரவை வலியுறுத்தல்

காஞ்சிபுரம், மே 26- காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்து வம் மற்றும் சட்டக் கல்லூரிகள் ஏற்படுத்த வேண்டும் என படப்பையில் நடைபெற்ற மாணவர் சங்க பேரவை வலி யுறுத்தியுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிறன்று படப்பையில் நடைபெற்றது. இதில் பி.சுபாஷ் தலைமை வகித்தார். ச.செந்தமிழ்பாரதி வாரவேற்க, சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினர் சி.மிருதுளா சிறப்புரையாற்றினார். ஹ.அருண் நன்றி கூறினார். தீர்மானங்கள் சேக்கிழார் அரசு பள்ளி கட்டடத்தில் இயங்கி வரும் குன்றத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்து, கட்டிடம் கட்டித்தர வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி அமைத்துத்தர வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தலைவராக பி.சுபாஷ், செயலாளராக எஸ்.ஏங்கல்ஸ், பொருளாளராக ஜெ.ரஞ்சித் உள்ளிட்ட 15பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.