சென்னை, ஜூன் 21 - கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணா புரத்தில் விஷச் சாராயம் அருந்திய 52 பேர் பலியான சம்பவம் தமிழ்நாடு முழு வதும் அதிர்வலையை ஏற்படுத்தி யுள்ளது.
அதிமுக அமளி
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கூடியதும் கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து பேசுவதற்கு அனு மதி கேட்டனர். சட்டமன்றத்தில் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் என்பதால் பேரவைத் தலைவர் மு. அப்பாவு அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, கேள்வி நேரத்தை நடத்தவிடாமல் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. மேலும், பேரவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணா செய்தனர்.
வெளியேற்றம் - சஸ்பெண்ட்
இதையடுத்து, சட்டப்பேரவை விதி களுக்கு புறம்பாகவும் மரபுகளுக்கு மாறாகவும் குழப்பம் விளைவித்த அதி முக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேறும்படி சபைக் காவலர் களுக்கு பேரவைத் தலைவர் உத்தர விட்டார். மேலும், பேரவை நிகழ்ச்சி களில் ஒரு நாள் பங்கேற்கவும் தடை விதித்தார்.
பெருந்தன்மை!
இதையடுத்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஜனநாயக முறையில் இந்த மன்றம் நடைபெற வேண்டும். எனவே, மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதில் கொள்கை உறுதி கொண்டவன் இந்த முதலமைச்சர். எனவே, எதிர்க்கட்சி தன்னுடைய கருத்தை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் மீதான தண்டனையை ரத்து செய்த பேரவைத் தலைவர், பேரவை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம் என்றார்.
பாமக - பாஜக வெளிநடப்பு
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வித மாக பாஜக - பாமக கட்சிகள் விவாதத் திற்குப் பிறகு வெளிநடப்பு செய்தனர்.