tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

செந்தில் பாலாஜி வழக்கில் ஏப்ரல் 30-இல் தீர்ப்பு!
சென்னை, ஏப்.25- சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்  கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த  வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தி ருந்தார். இந்த வழக்கில் வாதங்கள் நிறை வடைந்து தீர்ப்புக்காக ஒத்திவைக் கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த வழக்கில் தாங்  கள் கோரிய வங்கி தொடர்பான ஆவ ணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பதால் இந்த வழக்கில் தங்களது தரப்பில் மீண்டும் வாதிட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி செந்தில் பாலாஜி  தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்நிலையில், இந்த வழக்கில் அனை த்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை ஏப்ரல்  30-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத் துள்ளார்.

கைதானது தெரிந்தவர்கள் தான்; ஆனால், 
ரூ.4 கோடி எனதில்லை!நயினார் நாகேந்திரன் சமாளிப்பு

சென்னை, ஏப்.25- “நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடியுடன் பிடி பட்ட சதீஷ், நவின்,  பெருமாள் ஆகியோர்  தனக்குத் தெரிந்த வர்கள் தான்; ஆனால், அவர்கள் வைத்திருந்த பணத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று நெல்லை பாஜக வேட்பாளர் நயி னார் நாகேந்திரன் விளக்கம் அளித் துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்தி ரன், “தாம்பரம் ரயில் நிலையத்தில் பறி முதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி என்னு டைய பணம் இல்லை. அந்த பணத்துக்  கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இந்த விவகாரம் முழுக்க முழுக்க என்னை குறிவைத்து நடந்தது போல் உள்ளது. இதை நான் அர சியல் சூழ்ச்சியாகத்தான் பார்க்கிறேன். யாரோ கொண்டு சென்ற 4 கோடி பணம்  விவகாரத்தில் என்னுடைய பெயர் சேர்க்  கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மே  2-ஆம் தேதி தாம்பரம் காவல் நிலை யத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜ ராகி விளக்கம் அளிக்கவுள்ளேன்.

மாணிக்கம் தாகூர் மீதான வழக்கு
தேர்தல் ஆணையம் பதில்

சென்னை, ஏப்.25- மக்களவைத் தேர்தலின்போது மாணிக்கம் தாகூர் தரப்பில் பணப் பட்டுவாடா செய்ததாக மதுரையைச் சேர்ந்த பாஜக நிர்வாகி சசிகுமார்  என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த  வழக்கு விசாரணை நீதிபதிகள் மகா தேவன், சபீக் அடங்கிய அமர்வு முன்பு  ஏப்ரல் 25 அன்று விசாரணைக்கு வந் தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரர் கொடுத்த கோரிக்கை மனு ஏற்கனவே பரிசீலனையில் உள்ளது. ஒரு வாரத்தில் அந்த மனு மீது முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து  கொண்ட நீதிபதிகள் பாஜக நிர்வாகி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து  உத்தரவிட்டனர்.

பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? 
கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை!

சென்னை, ஏப்.25- மக்களவைத் தேர்தல் நடந்து முடிந் துள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி ஏப்ரல் 25 அன்று கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் அடையாறில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதில் பள்ளிக்கல்வித்துறை செயலா ளர் குமரகுருபரன், இயக்குநர் அறி வொளி, மாதிரி பள்ளிகள் இயக்குநர் சுதன், தொடக்கக்கல்வி இயக்குநர் கண்  ணப்பன், பாடநூல் கழக இயக்குநர் கஜ லட்சுமி, தேர்வுத்துறை இயக்குநர் சேது  வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கோடை விடுமுறை  முடிந்து பள்ளிகளை எப்போது திறப்பது?  10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புக்கான தேர்வு  முடிவுகளை எப்போது வெளியிடலாம்? என்பது பற்றி விரிவாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே  6-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெ னவே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த  தேதியிலேயே வெளியிட வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றியும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு  மேற்கொண்டார்.  பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும் போது மாணவர்களுக்கு பாடப்புத்தகங் கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் என்ன? என்பதையும் ஆய்வு செய்திருக்கிறார்.

மேலும், கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பள்ளிக்கூடங்கள் ஜூன் முதல் வாரம் திறக்க முடியுமா? அல்லது  கடந்த ஆண்டைப் போல பள்ளி திறப்பை  தள்ளி போடலாமா? என்பது குறித்தும் ஆலோசித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

போக்குவரத்து தொழிலாளர்க்கு உப்புக் கரைசல் வழங்க முடிவு
சென்னை, ஏப்.25- சுட்டெரித்து வரும்  கோடை வெயிலில்  இருந்து போக்கு வரத்து தொழிலாளர் களை பாதுகாக்க உப்புக் கரைசல் வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது என்று போக்கு வரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவ சங்கர் தெரிவித்துள்ளார். வெப்ப அலை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பேட்டியளித்த அமைச்சர் சிவ சங்கர், பயணிகளை பாதுகாக்கும் வித மாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரி வித்துள்ளார்.