tamilnadu

img

தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலை வாய்ப்பு 

தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீன்பிடித்துறைமுக திட்டக் காட்டுப்பாட்டுச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள இரண்டு ஊர்தி ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி : ஊர்தி ஓட்டுநர்

காலியிடங்கள் : 02

சம்பளம் : மாதம் ரூ. 19,000 - 62,000

வயதுவரம்பு : 01.07.2021 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினர் 32 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இலகுரக ஊர்தி ஓட்டுநர் உரிமம் பெற்று வாகனம் இயக்குவதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

தானியங்கி மோட்டார் வாகன பழுது பணிமனையில் ஒரு ஆண்டிற்கு குறையாமல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஒட்டுநர் உரிமம் நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இணையதளம் மூலம் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : செயற்பொறியாளர், மீன்பிடித்துறைமுக திட்டக் கோட்டம், ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகம், நந்தனம், சென்னை - 600035.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சென்று சேர கடைசி தேதி : 02.09.2021

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://bit.ly/3svToxM என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

;