சென்னை, ஜன. 7 - பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.26 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட் டம் நடத்துவது என்று ஜாக்டோ - ஜியோ தீர்மானித்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக்குழு கூட்டம் ஞாயி றன்று (ஜன.7) சென்னையில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அ. மாயவன், ஆ. செல்வம், ச.மயில் ஆகி யோர் தலைமை தாங்கினர். இந்தக் கூட்டத்தில் அரசு ஊழி யர், ஆசிரியர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஜன.22 முதல் 24 வரை மாநிலம் முழுவதும் கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்பு பிரச்சார செய்வது என்றும், ஜன.30 அன்று மாவட்டத் தலைநகரங்களில் மறி யல் நடத்துவது என்றும், பிப்.6 முதல் 9 வரை பாஜக அ.தி.மு.க. தவிர்த்து, அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோருவது என்றும் தீர்மானித்துள்ளனர்.
பிப். 10 அன்று மாவட்ட அள வில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது, பிப். 15 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என்றும், இதன் தொடர்ச்சியாக பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.