“தமிழ்நாட்டில் தற்போது பற்றிய தீ, ஒன்றிய அரசின் அடித்தளத்தை அசைக்கும். தமிழ்நாட்டை தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களை நிராகரித்துள்ளார்கள். வெள்ளம் பாதித்தபோது, தூத்துக்குடி வந்து பார்வையிட்டு போனவங்க போனதுதான். இன்னும் நிதி வரவில்லை, தமிழ்நாட்டை பற்றியும் ஒன்றிய அரசு சிந்திக்கவில்லை.” என்று ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் ஜூலை 27 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்.