சென்னை, ஜூன் 18- தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல்,வேலூர் உள்ளிட்ட 14 மாநக ராட்சிகள் உள்ளன. சென்னையை அடுத்த, திரு வள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட, ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரிக்கை எழுந்தது. சட்டப்பேரவையில் இதுகுறித்து வேண்டு கோள் விடுக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலித்த தமிழ்நாடு அரசு, ஆவடியை புதிய மாநகராட்சி யாக அறிவித்து அரசாணை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம், தமிழ்நாட்டின் 15ஆவது மாநகராட்சி யாக ஆவடி நகராட்சி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஆவடி நகராட்சி தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிறது. மாநகராட்சியாக அறிவிக்கப்பட் டிருக்கும் ஆவடியில் பூந்தமல்லி, திருவேற்காடு ஆகிய நகராட்சி களும், திருநின்றவூர் பேரூராட்சி யும் இடம் பெறுகிறது. நெமிலிச்சேரி, நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம், அயப்பாக்கம், வானகரம் உள்பட 11 கிராம ஊராட்சி கள் ஆவடி மாநகராட்சிக்குள் கொண்டுவரப்படும். இதில் 80 முதல் 100 வார்டுகள் வரை இருக்க லாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.