tamilnadu

img

வாக்களிக்காத அரசு ஊழியர்களுக்கு பொது விடுமுறை பொருந்தாதா?

சென்னை, ஏப்.20- தேர்தலில் வாக்களிக்காத அரசு ஊழியர்களுக்கு பொது விடுமுறை அறி விப்பு பொருந்தாது என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தமிழக உள்துறை செயலாளர் அமுதா, ஏப்ரல் 18 ஆம் தேதி வெளி யிட்டுள்ள அலுவலக உத்தரவில், தமி ழகத்தில், ஏப்ரல் 19 அன்று நடைபெறும் மக்களவை, விளவங்கோடு சட்டப்  பேரவை இடைத் தேர்தலை முன்னிட்டு  தேர்தல் ஆணையம் பொது விடுமுறை  அறிவித்துள்ளது. 

உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை பணியாளர்கள் அனைவரும் தவறாமல் உங்கள் வாக்கு களை செலுத்த வேண்டும்.

மேலும், துறையின் 2ஆம் நிலை  அலுவலர்கள், தங்களின் கீழ் பணி யாற்றும் பணியாளர்கள் வாக்குகளை முறையாக பதிவு செய்துள்ளார்களா? என்பதை உறுதிசெய்ய வேண்டும். வாக்கு  செலுத்தாத பணியாளர்கள் விவரங் களை, அப்பணியாளர்களின் விடுப்பின்  கணக்கில் இருந்து தற்செயல் அல்லது ஈட்டிய விடுப்பை கழிப்பதற்கு ஏதுவாக அலுவலக நடைமுறை பிரிவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், வாக்களிக்காத பணியாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்த பொது  விடுமுறை வழங்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

இது அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.

இதுகுறித்து, தலைமைச் செயலக அரசு ஊழியர் சங்கத் தலைவர் கு.  வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் உள்ளிட்டோர், தலைமை தேர்தல் அதி காரி சத்யபிரதா சாகுவிடம் நேரடியாக புகார் மனுவும் அளித்தனர்.

தனிநபர் சுதந்திரத்தில் தலையீடு
அதில், “உள்துறைச் செயலாள ரின் உத்தரவு தேர்தல் நடத்தை விதி களுக்கு முற்றிலும் முரணானதாகும். இது இந்திய அரசியலமைப்பு வழங்கி யுள்ள தனிநபர் சுதந்திரத்தில் தலை யிடும் செயலாகும். தங்கள்  குடும்பத்தில்  உள்ளவர்களையே வாக்களிக்க யாரா லும் கட்டுப்படுத்தவோ, நிர்பந்தப்படுத் தவோ முடியாது என்ற சூழலில், தனது  கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களை,  தான் வகிக்கும் அரசு செயலாளர் என்ற  பதவியை வைத்து எதேச்சதிகார தொனி யில், வாக்களிக்கத் தவறினால் அரசு  பொது விடுமுறையை அனுமதிக்க இய லாது என்பது அதிகார துஷ்பிரயோக செயல். உள்துறை செயலரின் இந்த உத்தரவால் பணியாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

நடத்தை விதிகளுக்கு எதிரானது
நூறு விழுக்காடு வாக்களிப்பதில் எந்த கருத்து வேறுபாடும் தலைமைச்  செயலக சங்கத்துக்கு இல்லை. ஆனால், அது ஒரு அதிகார உத்தரவால் செயல்  படுத்த நினைப்பதை ஏற்க முடியாது.  எனவே, தேர்தல் நடத்தை விதிகளுக்கு  எதிராக உள்துறைச் செயலர் வெளி யிட்டுள்ள அலுவலக உத்தரவை உடனே ரத்து செய்து, உள்துறைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப் பிட்டிருந்தனர்.

இந்நிலையில், உள்துறைச் செய லாளரின் உத்தரவு திரும்பப் பெறப்படு வதாக தமிழக உள்துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த உத்தரவு உடனடி யாக அமலுக்கு வருவதாகவும் உள் துறை தெரிவித்துள்ளது.