“சாதி, ஆண்ட பரம்பரை, அரச பரம்பரை என்றெல்லாம் சொல்லிக் கொடுக்காதீங்க.. அவர்கள் என்றோ ஒரு காலத்தில் ஆண்டார்கள்.. இன்றைக்கு நீ பிச்சை எடுக்குற.. அவன் கோட்டை கட்டி ஆண்டாலும், அவர்களின் பரம்பரை இன்று என்ன நிலையில் இருக்கிறது? அது நிலைக்காது என்பது தானே அதன் அர்த்தம்.. கோட்டை காட்டி ஆண்டவரின் பரம்பரை.. நான் இத்தனையாவது வழி பிள்ளை.. மறுபடியும் அதே கம்பீரத்துடன் போவேன்.. யானையில் போவேன்.. குதிரையில் போவேன்.. போக முடியுதா.. முடியாது.. இது தான் வாழ்க்கை. அதனால் அதைச் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை” என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. பேசியுள்ளார்.