tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

‘திருக்குறள் AI’ என்ற ஜெனரேட்டிவ் ஏஐ பாட் அறிமுகம்!

திருக்குறள் தொடர்பான அனைத்து தகவல்களையும் வழங்கும் வகையில் ‘திருக்குறள் AI’ என்ற ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI Bot) பாட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் அண்மையில் ‘கணித்தமிழ் 24’ என்ற பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ‘திருக்குறள் ஏஐ’ என்ற ஜெனரேட்டிவ் ஏஐ பாட் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஏஐ பாட்டை கிஸ்ஃப்லோ (Kissflow) எனும் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இதில் வள்ளுவரின் 1,330 குறளையும் அதற்கான விளக்கங்களையும் பயனர்கள் பெற முடியும். முன்னாள் முதல்வர் கருணாநிதி, பரிமேலழகர், சாலமன் பாப்பையா மற்றும் மு.வரதராசனார் ஆகியோரின் பொருள் விளக்கம் ஒவ்வொரு குறளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உரையாடல் வடிவிலும் இந்த ஏஐ பாட்டில் குறள்களைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் போலி தகவல்களை தடுத்து நிறுத்த!

போலியாக தயாரிக்கப்பட்ட வீடியோ மற்றும் வாய்ஸ் பதிவுகள் வாட்ஸ்அப்பில் பரப்பப்படு வதை தடுத்து நிறுத்த, மெட்டா நிறுவனம் புதிய ஹெல்ப்லைன் (Helpline) வசதியை அறிமுகம் செய் துள்ளது.

டீப்ஃபேக்ஸ் (Deepfakes) அல்லது மற்ற செயற்கை நுண்ணறிவு தளங்களில் தயாரிக்கப்பட்ட போலியான வீடியோ மற்றும் வாய்ஸ் பதிவுகள் பரப்பப்படுவதை தடுத்து நிறுத்த Misinformation Combat Alliance (MCA) உடன் இணைந்து ஹெல்ப்லைன் என்ற வசதி மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெல்ப்லைன் வசதி ஆங்கிலம் தவிர இந்தி, தமிழ்,  தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் கிடைக்க உள் ளன. பயனர்கள் ஹெல்ப்லைன் என்ற வாட்ஸ்அப் சாட்போட் மூலம் உரைகள், புகைப்படம் மற்றும் வீடி யோக்கள் வடிவில் வரும் செய்திகளின் உண்மைத்  தன்மையை கண்டறிய முடியும். வரும் மார்ச் மாதம்  முதல் பொதுமக்கள் பயன்படுத்த இந்த ஹெல்ப்லைன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெமினி ஏ.ஐ மூலம் படங்களை உருவாக்குவதை நிறுத்திய கூகுள்!
ஜெமினி (Gemini) செயற்கை நுண் ணறிவு சாட்பாட், சில வரலாற்றுச் சித்தரிப்புகளில் தவறானவற்றை படமாக வழங்கிய நிலையில் கூகுள் நிறுவனம் ஜெமினி ஏ.ஐ மூலம் படங்களை உருவாக்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

கூகுள் நிறுவ னம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி பார்ட்  (Bard) என்ற செயற்கை நுண்ண றிவு சாட்பாட்டிற்கு சில திறன்களை மேம்படுத்தி அதற்கு ஜெமினி என்று பெயர் மாற்றம் செய்தது. ஓபன்  ஏ.ஐ-யின் (Open AI) சாட் ஜிபிடி-யை (ChatGPT) போலவே ஜெமினியும் பயனர்கள் அளிக்கும் தகவல்களை பெற்றுக்கொண்டு அதற்கு ஏற்றார் போல் படங்களை உருவாக்கி, தகவல்களை தரும் திறன்கொண்டது. ஆனால் ஜெமினி பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட சில நாட்களிலேயே, அது வரலாற்று சித்தரிப்புகளில் தவறானவற்றை படமாக வழங்கிய தாக பயனர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். ஜெமினி உருவாக்கிய சில படங்கள் தவறாக வழி நடத்துவதாக கூகுள் நிறுவனமும் ஒப்புக்கொண்டது. இந்த நிலையில், கூகுள் நிறுவனம் ஜெமினி ஏ.ஐ மூலம் படங்களை உருவாக்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.