tamilnadu

img

உதகையில் ஒருங்கிணைந்த நெகிழி சேகரிப்புப் பணி

உதகையில் ஒருங்கிணைந்த நெகிழி சேகரிப்புப் பணி

உதகை, ஏப்.19- உதகையில் அனைத்துத் துறை களும் ஒன்றிணைந்து நெகிழி சேக ரிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட் டனர். முன்னதாக, நெகிழிப் பயன் பாட்டைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்பு ணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் நெகிழி பயன்பாட்டை முற்றிலுமாக குறைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகி றது. தற்போது, உதகை சீசன் என்ப தால், பல்லாயிரக்கணக்கான சுற் றுலாப் பயணிகள் உதகைக்கு வரு கின்றனர். இந்நிலையில், நெகிழி சேகரிப்பு பணி மற்றும் விழிப்பு ணர்வு பணி நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா  தண்ணீரு தலைமையில், உதகை ரயில் நிலைய முகப்பில் இருந்து சேரிங்கிராஸ் வழியாக அரசு தாவரவியல் பூங்கா வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று இந்த நெகிழி சேகரிப்புப் பணியை மேற்கொண்டனர். உதகை ரயில் நிலையம், மார்க்கெட், லோயர் பஜார், சேரிங்கிராஸ், அசெம்பிளி திரையரங்கம் ஆகிய பகுதிகள் வழியாக உதகை அரசு தாவரவி யல் பூங்கா வரை உள்ள வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் நடந்து சென்று பிளாஸ் டிக் கழிவுகளைச் சேகரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், நீலகிரி மாவட்டத்தில் நெகிழி சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசு  அலுவலகங்கள் தொடங்கி, பொது மக்கள் கூடும் இடங்கள், அங்கன் வாடி மையங்கள், பள்ளி, கல்லூரி கள், மாணவர் விடுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சுற்று லாப் பயணிகள் அதிகம் வரும் இடங்கள் என அனைத்து இடங்களி லும் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்கள் வீடு, பகுதி, ஊர், நகரம் மற்றும் மாவட்டம் ஆகியவற்றைச் சுத்த மாக வைத்துக் கொள்வது ஒவ்வொ ருவரின் கடமை என்பதை உணர்த் துவதாகும். மேலும், தமிழக அர சால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட் களால் ஏற்படும் சுற்றுச்சூழல் தீமை கள் குறித்தும், பிளாஸ்டிக் பொருட் களுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்துவதன் அவசி யம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப டுத்தப்பட்டது. உணவுப் பொருட்களைக் கட் டப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாளிற்குப் பதிலாக அலுமினியத் தகடு தாளையும், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாளிற்குப் பதிலாக காகிதச் சுருள்களையும் பயன்ப டுத்துவது போன்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுப் பொருட்கள் குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. உதகை மார்க்கெட் உட்பட அனைத்து வணிக வளா கங்கள் மற்றும் அனைத்துக் கடைக ளின் முன்பும் குப்பைத் தொட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ள தாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் உதகை வட்டாட் சியர் சங்கர்கணேஷ், நெடுஞ்சா லைத்துறை உதவிப் பொறியாளர் பிரகாஷ், உதகை நகர்நல அலுவ லர் சிபி உட்பட பலர் கலந்து கொண் டனர்.