சென்னை, ஆக. 22- மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
கொல்கத்தா பயிற்சி மருத்துவ மாணவியை, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி படுகொலை செய்த, கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், பெண்கள் - குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க ஒன்றிய மாநில அரசுகள் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்,
மருத்துவ ர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சென்னைக் கோட்டம் 2இன் மகளிர் துணைக்குழு சார்பில் பாரிமுனையில் உள்ள எல்ஐசி பாம்பே மியூச்சுவல் கட்டிட வளாகத்தில் வியாழ னன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.சர்வமங்களா தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், எழும்பூர் அரசு மருத்துவ மனையின் குழந்தைகள் நல மருத்துவ ருமான பெருமாள்பிள்ளை, சங்கத்தின் தலைவர் கே.மனோகரன், தென்னிந் திய இன்சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் உதவி பொருளாளர் வி.ஜானகிராமன் ஆகியோர் பேசினர்.