அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தல்
திருப்பூ ஆத்துப்பாளையம் பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்சனைக ளுக்கு தீர்வு காணக்கோரி, ஞாயி றன்று கோரிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி, 10 ஆவது வார்டுக்குட்பட்ட ஆத்துப்பாளை யம் பகுதியில் நல்லாற்றை தூர் வார வேண்டும். உடற்பயிற்சி கூடத் துடன் கூடிய விளையாட்டு மைதா னம் அமைக்க வேண்டும் மற்றும் அடிப்படை பிரச்சனைகளை தீர்க் கக்கோரி, இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் மே 11 ஆம் தேதி யன்று உண்ணாவிரதம் நடைபெ றும் என அறிவித்திருந்தனர். இதனி டையே, வெள்ளியன்று வட்டாட்சி யர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து, சனி யன்று பொதுப்பணித்துறை அலுவ லர்கள், குடிமை பொருள் அலு வர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட குழுவினர் 10 ஆவது வார்டு பகுதியில் ஆய்வு மேற் கொண்டனர். அப்போது, கழிப்பி டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நல்லாற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். உடன டியாக சாலைப்பணிகள் மேற் கொள்ளப்படும். அனைத்து அடிப் படை பிரச்சனைகளுக்கும் ஒரு மாத காலத்தில் தீர்வு காணப்படும், என உறுதியளிக்கப்பட்டது. இதை யொட்டி, உண்ணாவிரதம் தற்காலி கமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிறன்று வாலிபர் சங்க ஆத்துப்பாளையம் கிளைத் தலைவர் பாலாஜி தலை மையில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. சங் கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் சிறப்புரையாற்றி னார். மாவட்டத் தலைவர் எஸ்.அருள், செயலாளர் கே.பாலமுரளி, நிர்வாகிகள் நிருபன் சக்ரவர்த்தி, பாலசுப்பிரமணியம், வடக்கு ஒன்றி யத் தலைவர் ஜி.ரேவந்த், செயலா ளர் சந்தோஷ், மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.காளியப்பன், முன் னாள் செயலாளர் ச.நந்தகோபால், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.மாரப்பன் ஆகியோர் உரை யாற்றினர். இதில் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.